Flag of Italy.svg
உலகம்செய்திகள்

வரட்சியால் இத்தாலியில் அவசரநிலைப் பிரகடனம்!

Share

இத்தாலியில் 70 ஆண்டுகளில் இல்லாத மோசமான வரட்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் போ நதியைச் சூழவுள்ள ஐந்து வடக்கு பிராந்தியங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

நீர் பற்றாக்குறையை கையாள்வதற்காக இந்தப் பிராந்தியங்களுக்கு 38 மில்லியன் டொலர் அவசர நிதி வழங்கப்படுவதாகவும் இத்தாலி அரசு குறிப்பிட்டுள்ளது. இந்த வரட்சி இத்தாலியின் 30 வீதத்துக்கும் அதிகமான விவசாய உற்பத்திகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருப்பதாக அந்நாட்டு விவசாய சங்கம் குறிப்பிட்டுள்ளது.

பங்கீட்டு முறையில் நீரை விநியோகிப்பது குறித்து பல மாநகர சபைகளும் ஏற்கனவே அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.

குளிர் மற்றும் வசந்த காலத்தில் வழக்கத்திற்கு மாறான சூடான வெப்பநிலை மற்றும் குறைந்த மழைவீழ்ச்சி வடக்கு இத்தாலியில் நீர் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய சூழலை அசாதாரண முறையிலும் அதிகாரங்களைக் கொண்டும் நிர்வகிப்பதற்காகவுமே அவசர நிலை அறிவிக்கப்பட்டதாக இத்தாலி அரசு குறிப்பிட்டுள்ளது.

#WorldNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
24 2
இலங்கைசெய்திகள்

திருமணத்திற்கு பணம் திரட்டுவதற்காக இளைஞர்கள் செய்த மோசமான செயல்

கொழும்பின் புறநகர் பகுதியிலுள்ள பழங்கால விகாரையில் புரதான பித்தளை விளக்கை திருடிய குற்றச்சாட்டில் 3 பேர்...

25 2
இலங்கைசெய்திகள்

மகிந்த ராஜபக்ச தூக்கிலிடப்பட வேண்டும்! விமல் பரபரப்பு கருத்து

முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் போன்சேகா கூறுவது போன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த...

21 2
இலங்கைசெய்திகள்

நாட்டை மீட்க அர்ப்பணிப்பான சர்வதிகாரி தேவை : வலியுறுத்தும் சரத் பொன்சேகா

இலங்கையை மீட்பதற்கு, நாட்டை நேசிக்கக்கூடிய – அர்ப்பணிப்பான சர்வாதிகாரி அவசியம் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்...

23 2
இலங்கைசெய்திகள்

க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் மீள்பரிசீலனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது....