24 65fe5f4641563
உலகம்செய்திகள்

இளவரசி கேட்டுக்கு புற்றுநோய் பாதிப்பு: மௌனம் காத்தது ஏன்?

Share

இளவரசி கேட்டுக்கு புற்றுநோய் பாதிப்பு: மௌனம் காத்தது ஏன்?

இளவரசி கேட், தனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளியிட்டுள்ள தகவல், ராஜ குடும்ப ரசிகர்களையும், பிரித்தானிய மக்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிரித்தானிய இளவரசி கேட், ஜனவரி மாதம் உடல் நலம் பாதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார். ஆனால், அதற்குப் பின் அவரைக் குறித்து எந்த செய்தியும் வெளியாகாததால், அவருக்கு என்ன ஆயிற்று என உண்மையாகவே அக்கறையுடன் ஒரு கூட்டமும், ஆர்வத்துடன் ஒரு கூட்டமும் யோசிக்கத் துவங்க, அவரைக் குறித்த வதந்திகள் பரவத்துவங்கின.

அவர் இறந்துவிட்டார், வில்லியமைப் பிரிந்துவிட்டார் என்றெல்லாம் கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல், ஊடகங்கள் எழுதவும், கேலி பேசவும் செய்தன.

இந்நிலையில், தனக்கு புற்றுநோய் தாக்கியுள்ளதாகவும், தான் அதற்கான சிகிச்சையிலிருப்பதாகவும் தெரிவித்துள்ளார் இளவரசி கேட். வெளியான அந்த செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அதே நேரத்தில், ஏன் இவ்வளவு நாட்களாக அந்த செய்தி வெளியிடப்படவில்லை என்ற கேள்வியும் எழுந்தது.

கேட், நாட்டுக்கு இளவரசி என்றாலும், தன் பிள்ளைகளுக்குத் தாய். அந்த சின்னஞ்சிறு பிள்ளைகளால், தங்கள் அன்புத் தாய்க்கு புற்றுநோய் என்ற செய்தியை எப்படித் தாங்கிக்கொள்ளமுடியும்?

ஆகவேதான், இளவரசிக்கு புற்றுநோய் என்னும் செய்தியை வெளியிட அரண்மனை வட்டாரம் தாமதப்படுத்திவந்ததாக தற்போது அவரது நலம் விரும்பிகள் கூறுகிறார்கள்.

அத்துடன், கேட் வில்லியமுக்கிடையிலான அன்பும் உலகம் அறிந்ததே. ஆகவேதான், தன் மனைவிக்கு உடல் நல பாதிப்பு என தெரியவந்ததும், முக்கியமான நிகழ்ச்சிகளை ரத்து செய்டுவிட்டு தன் மனைவியின் அருகில் அவருக்கு ஆதரவாக இருப்பதற்காக ஓடியிருக்கிறார் இளவரசர் வில்லியம்.

இதுவரை இளவரசியை மோசமாக கேலி செய்தவர்களும், விமர்சனம் செய்தவர்களும் இப்போது தங்கள் முகத்தை எங்கே கொண்டு வைத்துக்கொள்ளப்போகிறார்கள் என்கிறார்கள் அவரது நலம் விரும்பிகள்!

Share
தொடர்புடையது
25 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச சுபநேரக் குழுவின்மையால் சர்ச்சை: ‘சர்வஜன அதிகாரம்’ வெளியிட்ட புத்தாண்டு சுபநேரப் பத்திரம்!

2024 ஆம் ஆண்டில் கலாசார திணைக்களத்தால் அரச சுபநேரக் குழு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கம் இதுவரையில்...

24 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுகாதார சேவையை வலுப்படுத்த புதிய முயற்சி: 2,918 செவிலியர் மாணவர்கள் இணைப்பு!

இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் நோக்கில், புதிய மாணவ செவிலியர் பயிற்சிக்காக 2,918 பேரை இணைத்துக்கொள்ளும்...

23 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கில் அமைதியை வலியுறுத்தும் ஹமாஸ்: ஈரானிடம் விடுத்த கோரிக்கை!

மத்திய கிழக்கில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்து வரும்...

22 11
செய்திகள்உலகம்

புதிய தலைவர் மொஜ்தபா காமெனிக்கு அச்சுறுத்தல் விடுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – ஈரான் எச்சரிக்கை!

ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனியை (Mojtaba Khamenei) இலக்கு வைத்து அமெரிக்காவோ...