பதவி விலகிய போர்த்துக்கல் பிரதமர்

rtjy 83

பதவி விலகிய போர்த்துக்கல் பிரதமர்

போர்த்துக்கல் பிரதமர் அன்டோனியோ கோஸ்டா அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டினைத் தொடர்ந்து தனது பதவியை விட்டு விலகியுள்ளார்.

ஐரோப்பிய நாடான போர்த்துக்கலில் பிரதமர் அன்டோனியோ கோஸ்டா மீது லித்திய சுரங்கங்கள் தொடர்பான ஒப்பந்தத்தில் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஊழல் தடுப்புத்துறை அதிகாரிகள் பிரதமர், அமைச்சர் சபையில் இடம்பெற்றுள்ள முக்கிய அமைச்சர்கள் உட்பட பலரின் வீடுகளில் சோதனை நடத்தியிருந்தனர்.

மேலும் அன்டோனியோவின் நெருங்கிய தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர் எதிர்க்கட்சிகள் கொடுத்த அழுத்தத்தைத் தொடர்ந்து இன்று அன்டோனியோ தனது பதவியை ராஜினாமா செய்தார்.

Exit mobile version