11 29
உலகம்செய்திகள்

இந்தியாவின் தக்க பதிலடி… துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்

Share

இந்த மாத தொடக்கத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட போதிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் இன்னும் அதிகமாகவே உள்ளது.

பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிப்பதை முன்னிலைப்படுத்த இந்தியா மற்ற நாடுகளுக்கு பிரதிநிதிகளை அனுப்பத் தொடங்கியுள்ளது. இந்த நடவடிக்கை சில நாடுகளை பதட்டப்படுத்தியுள்ளது, ஏனெனில் இது பாகிஸ்தானுக்கு பயங்கரவாத குழுக்களுடன் உள்ள தொடர்புகளை அம்பலப்படுத்துகிறது.

இதற்கிடையில், பாகிஸ்தான் பிரதமர் ஷேஹ்பாஸ் ஷெரீப் மே 25 முதல் மே 30 வரை ஆறு நாள் வெளிநாட்டுப் பயணத்தைத் தொடங்க இருக்கிறார். அவர் துருக்கி, அஜர்பைஜான், ஈரான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளுக்குச் செல்கிறார்.

இந்தியாவின் சமீபத்திய இராணுவ நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரின் போது இரு நாடுகளும் பாகிஸ்தானை ஆதரித்ததால், துருக்கி மற்றும் அஜர்பைஜானுக்கு அவர் விஜயம் செய்வார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூரை துருக்கி விமர்சித்தது மட்டுமல்லாமல், பாகிஸ்தானுக்கு ட்ரோன்களையும் வழங்கியது. இந்த ட்ரோன்கள் இந்திய இராணுவப் பகுதிகள் மற்றும் நகரங்களை குறிவைக்கப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அவற்றைச் சுட்டு வீழ்த்தின. இந்த நடவடிக்கையின் போது அஜர்பைஜானும் பாகிஸ்தானை ஆதரித்தது.

பயங்கரவாத முகாம்கள் மீதான இந்தியாவின் இராணுவத் தாக்குதல்களை அது கடுமையாகக் கண்டித்தது மற்றும் பாகிஸ்தான் மக்களுக்கு ஆதரவைத் தெரிவித்தது.

நான்கு நாடுகளின் தலைவர்களுடன் பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் இந்தப் பயணத்தைப் பயன்படுத்தலாம் என்று பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மட்டுமின்றி, இந்தியாவுடனான சமீபத்திய மோதலின் போது பாகிஸ்தானுடன் நின்றதற்காக இந்த நாடுகளுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிக்கவும் இந்த வாய்ப்பை ஷெரீப் பயன்படுத்துவார் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் ராஜதந்திர அழுத்தத்தால் அதிகரித்து வரும் நெருக்கடிகளுக்கு மத்தியில், சர்வதேச ஆதரவைப் பெறுவதற்கான பாகிஸ்தானின் முயற்சியாக இந்த சுற்றுப்பயணம் பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...