3 2 scaled
உலகம்செய்திகள்

ஈரானுக்கு பயத்தை காட்டிய ஆசிய நாடு: இரண்டு நாட்களுக்கு பிறகு பழிக்குப் பழி

Share

பயங்கரவாதிகள் முகாம்களை அழிப்பதாக கூறி ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு, இரண்டு நாட்களுக்கு பிறகு பாகிஸ்தான் பழிக்குப் பழி வாங்கியுள்ளது.

ஈரான் மீது பாகிஸ்தான் முன்னெடுத்த வான் தாக்குதலில் நான்கு சிறார்கள் உட்பட 7 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் தெரிவித்த அதே காரணத்தையே தற்போது பாகிஸ்தானும் தெரிவித்துள்ளது.

ஈரான் தாக்குதல் முன்னெடுத்த இரண்டு நாட்களுக்கு பின்னர் பாகிஸ்தான் பழிக்குப் பழி வாங்கியுள்ளது. இரு நாடுகளும் தங்கள் எல்லையில் உள்ள பிராந்தியங்களில் இருந்து தாக்குதல்களை நடத்தும் போராளிக் குழுக்களுக்கு அடைக்கலம் கொடுப்பதாக நீண்ட காலமாக ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி வருகின்றன.

ஆனால் இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கும் ஈரானுக்கும் இடையே அதிகாரப்பூர்வ ராணுவ நடவடிக்கை என்பது அசாதாரணமானதாகவே பார்க்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையே உறவில் விரிசல் இருந்தாலும், பொதுவாக இணக்கமான சூழலையே காப்பாற்றி வந்துள்ளனர்.

ஈரான் மீதான தாக்குதலை பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சரகம் உறுதி செய்துள்ளது. ஆனால் இந்த தகவலை ஈரான் ஊடகங்கள் புதன்கிழமை மதியத்திற்கு மேல் வெளியிட்டிருந்தது.

ஈரான் தாக்குதலை அடுத்து கடும் பின்விளைவுகள் குறித்து பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்திருந்தது. மட்டுமின்றி, பாகிஸ்தானுக்கான ஈரான் தூதரை நாடு திரும்ப தடை விதித்தது, பாகிஸ்தானில் இருந்தும் தனது சொந்த தூதரை ஈரான் திரும்பப் பெற்றது.

பாகிஸ்தான் மக்கள் மீது தாக்குதல் முன்னெடுக்கப்படவில்லை என்றும் பயங்கரவாத அமைப்பு மீது மட்டுமே தாக்குதல் நடத்தியதாகவும் ஈரான் விளக்கமளித்திருந்தது. இந்த வார தொடக்கத்தில் ஈராக் மற்றும் சிரியா மீதும் ஈரான் தாக்குதலை முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...

images 4 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக வாக்களிக்கும் உரிமை மற்றும் குடியுரிமை வழங்கு: மத்திய அரசுக்கு எஸ். ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கு (Refugees) வாக்களிக்கும் உரிமை மற்றும்...

25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...

25 690c956ec39eb
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கண் பரிசோதனை நிலையத்தில் தீ விபத்து: மின் ஒழுக்கு காரணமெனத் தகவல்!

திருகோணமலைத் துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, திருகோணமலை பொது வைத்தியசாலையின் அருகாமையில் உள்ள ஒரு தனியார் கண்...