3 11
உலகம்செய்திகள்

ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு மாற்றப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் போட்டிகள்

Share

பாகிஸ்தானின் 20க்கு 20 கிரிக்கெட் லீக் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு மாற்றப்படும் என்று பாகிஸ்தானிய கிரிக்கெட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராவல்பிண்டி மைதானத்துக்கு அருகில் இந்திய ட்ரோன் ஒன்று வீழ்ந்து வெடித்தமையை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களை குறிவைத்து வேண்டுமென்றே செய்யப்பட்ட முயற்சி என்று பாகிஸ்தானிய வெளியுறவு அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எனினும் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் எதனையும் வழங்கவில்லை. இந்தநிலையில் பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு மாற்றப்பட்டுள்ளன என்பதை பாகிஸ்தான் கிரிக்கெட் சபையும் உறுதிப்படுத்தியுள்ளது.

வீரர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலையும் விளையாட்டுகளையும் பிரித்து வைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில், எப்போதும் பாகிஸ்தான் உறுதியாக இருந்து வருகிறது.

இருப்பினும், மைதானத்தை குறிவைத்து இந்தியா நடத்திய தாக்குதல் மிகவும் பொறுப்பற்றது என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.

முன்னதாக, முன்னாள் செம்பியன்களான கராச்சி கிங்ஸ் மற்றும் பெசாவர் ஸல்மி ஆகிய அணிகள், வியாழக்கிழமை ராவல்பிண்டி மைதானத்தில் விளையாடவிருந்தன.

ஆனால், இந்தியாவின் ட்ரோன் ஒன்று மைதானத்திற்கு அருகில் விழுந்ததால் போட்டி ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையில் பாகிஸ்தானின் ப்ரீமியர் லீக் போட்டிகளில் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஸ், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட முப்பத்தேழு வெளிநாட்டு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...