wedding
உலகம்செய்திகள்

சம்பளத்துடன் ஒரு மாத விடுமுறை! – தம்பதிகளுக்கு சீனா சலுகை

Share

சீனாவில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவில் மக்கள் தொகை வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு, சீனாவில் 1,000 பேருக்கு 6.77 பிறப்புகள் என்ற மிகக் குறைந்த பிறப்பு விகிதத்தை பதிவு செய்தது.

இதனால், மக்கள் தொகையை அதிகரிக்க சீனா பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது. இந்நிலையில், திருமணத்தை ஊக்குவிக்கவும், பிறப்பு விகிதத்தை அதிகரிக்கவும் சீனாவில் உள்ள சில மாகாணங்கள் இளம் புதுமணத் தம்பதிகளுக்கு 30 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளன.

அதன்படி, வடமேற்கு மாகாணமான கன்சு மற்றும் நிலக்கரி உற்பத்தி செய்யும் மாகாணமான ஷாங்க்சி ஆகியவை 30 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்குகின்றன.

இதுகுறித்து, தென்மேற்கு நிதி மற்றும் பொருளாதார பல்கலைக்கழகத்தின் சமூக மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் டீன் யாங் ஹையாங் கூறுகையில், “திருமண விடுமுறையை நீட்டிப்பதன் மூலம் கருவுறுதல் விகிதம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது. திருமண விடுப்பு நீட்டிப்பு முக்கியமாக சில மாகாணங்கள் மற்றும் ஒப்பீட்டளவில் குறைந்த பொருளாதார வளர்ச்சியைக் கொண்ட நகரங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது” என்றார்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...