6 39
உலகம்

சுற்றுலா பயணிகளுக்காக வினோத திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள நாடு

Share

சுற்றுலா பயணிகளுக்காக வினோத திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள நாடு

சுற்றுலாப் பயணிகளுக்காக ஜப்பான்(Japan) ஒரு வினோதமான திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, ஒரே நாளில் பாடசாலை படிப்பை முடித்து சான்றிதழ் தரும் திட்டம் ஒன்றை ஜப்பான் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜப்பானுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக “ஒரு நாள் மாணவர்” என்ற புதிய திட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தத் திட்டத்தின் கீழ் உள்ளூர் பாடசாலையில் மாணவராக ஒரு நாளைக் கழிக்க முடியும் என தெரிவிக்கபடுகிறது.

சிபா ப்ரிபெக்சரில் உள்ள பழைய பாடசாலையில் இந்த திட்டம் நடைபெறுகின்றதுடன் 30,000 யென் மூலம் இந்தத் திட்டத்தில் நீங்கள் ஒரே நாளில் சான்றிதழை பெறலாம் என கூறப்படுகின்றது.

இந்த பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக கையெழுத்து, கட்டானா சண்டை, உடற்கல்வி மற்றும் பல கற்றல் நடவடிக்கைகள் அனுபவிக்க முடியும் என தெரிக்கப்படுகின்றது.

அத்துடன், முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் நடத்தப்படும் இந்நிகழ்ச்சி திட்டத்தை உண்டோகயா என்ற நிறுவனம் தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
water cut
உலகம்

பிரித்தானியாவில் வறட்சியை தடுப்பதற்கு பிரித்தானியாவில் புதிய தண்ணீர் கட்டுப்பாடுகள்.

  பிரித்தானியாவின் பல பகுதிகள் வெப்ப அலை காரணமாக வெப்ப சாதனைகளை படைத்துள்ளன. 1976 மற்றும்...

Drug
உலகம்உலகம்

பதின் பருவத்தை கடந்த இளையவர்களை அதிகம் காவு வாங்கும் போதைப்பொருள் – ஜேர்மனியில் அதிர்ச்சி.

  போதைப்பொருட்களால் பலியாகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் விடயம் ஜேர்மனியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. அண்மையில், தலைநகர்...

gold 2
வணிகம்இலங்கைஉலகம்

இன்றைய தினத்திலும் தங்கத்தின் விலையில் சரிவு!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது இன்றும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள...

fake doctor
உலகம்

15 மரணங்களுக்கும் நானே காரணம் – அதிர வைக்கும் போலி மருத்துவரின் பின்னணி!

ஜெர்மனியைச் சேர்ந்த நோய்த்தணிப்பு சிகிச்சை மருத்துவர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தனது 15 நோயாளிகளின்...