23 654f5f544cffb
உலகம்செய்திகள்

ஹமாஸ் படைகளால் கொல்லப்பட்ட இஸ்ரேலிய மக்களின் எண்ணிக்கை

Share

ஹமாஸ் படைகளால் கொல்லப்பட்ட இஸ்ரேலிய மக்களின் எண்ணிக்கை

அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் படைகள் முன்னெடுத்த அதிரடி தாக்குதலில் கொல்லப்பட்ட இஸ்ரேலியர்கள் எண்ணிக்கையானது 36 நாட்களுக்கு பின்னர் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேலின் இராணுவக்கட்டுப்பாடுகள் மிகுந்த எல்லைக்குள் புகுந்து அதிரடி தாக்குதலை முன்னெடுத்தது ஹமாஸ் படைகள். உடனையே இஸ்ரேல் தரப்பு வெளியிட்டுள்ள தகவலில் 1,400 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர் மாயமாகியுள்ளதாகவும் குறிப்பிட்டது.
இதனையடுத்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேல் அரசாங்கம் போர் பிரகடனம் செய்துள்ளதுடன், அமெரிக்கா மற்றும் பிரித்தானிய ஆதரவுடன் காஸா மீது கொடூர தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.
இதில் இதுவரை கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 11,100 என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் பாலஸ்தீன இறப்பு எண்ணிக்கையில் தமக்கு சந்தேகம் இருப்பதாக நகையாடிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு இறந்தவர்களின் அடையாள அட்டை இலக்கத்துடன், விரிவான அறிக்கை ஒன்றை பாலஸ்தீன அரசாங்கம் வெளியிட்டது.
அதன் பின்னர் இதுவரை ஜோ பைடன் இந்த விவகாரம் குறித்து பொதுவெளியில் விவாதிப்பதில்லை. மேலும், இதுநாள் வரையில் ஹமாஸ் கொன்று குவித்த இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை 1,400 என பரவலாக குறிப்பிட்டு வந்த நெதன்யாகு அரசாங்கம் திடீரென்று, இறந்தவர்கள் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டுள்ளது.
இதன் பின்னணி என்ன என்பது மர்மமாகவே உள்ளது. அக்டோபர் 7ல் கொல்லப்பட்ட இஸ்ரேலியர்கள் எண்னிக்கை தற்போது 1,200 என கூறி வருகிறது. உண்மையில் இந்த எண்ணிக்கையும் உண்மை தானா என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது.
அத்துடன் இதுவரை சடலங்களை அடையாளம் காணும் பணி முடிவடையவில்லை எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும், தற்போது 200 எண்னிக்கை குறைந்துள்ளதன் காரணத்தையும் இஸ்ரேல் தரப்பு வெளியிடவில்லை.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...