tamilni 13 scaled
உலகம்செய்திகள்

2024இல் உலகில் ஏற்படவுள்ள மாற்றங்கள்

Share

16ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்த ஜோதிடர் நாஸ்ட்ராடாமஸ், எதிர்காலத்தை பற்றிய துல்லியமான குறிப்புகளை புதிர் வடிவில் எழுதியுள்ளதால் அவரை உலக மக்கள் மிகப்பெரிய தீர்க்கதிரிசியாக கருதுகின்றனர்.

பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்டு வாரியாக இவர் கணித்த பல விடயங்கள் இப்போது வரை நிகழ்ந்து வருகிறது.

இரட்டை கோபுர தாக்குதல், ஹிட்லரின் வளர்ச்சி மற்றும் உலக மகா யுத்தங்கள் போன்ற விடயங்கள் இவரின் கணிப்புகளில் பிரசித்தி பெற்றவை.

இது போன்ற பல விடயங்களை கணித்த நாஸ்ட்ராடாமஸின் 2024ஆம் ஆண்டுக்கான கணிப்புகள் வருமாறு,

2024ஆம் ஆண்டில் காலநிலை பேரழிவுகள் அதிகமாக ஏற்படும் என நாஸ்ட்ராடாமஸ் அவரது குறிப்புகளில் கூறியுள்ளார்.

புவி வெப்பநிலையில் அதிகரிப்பு ஏற்பட்டு அதிகளவான நிலங்கள் வரட்சியை சந்திப்பதோடு பனிப்பாறைகள் உருகி வெள்ளப்பெருக்குகளும் ஏற்படும் என அவர் கணித்துள்ளார்.

மேலும், சுனாமி போன்ற பேரழிவுகள் ஏற்படுவதோடு, விவசாய பயிர்கள் நோய்த் தாக்கத்துக்குள்ளாகி உலகில் பட்டினி நிலைமை அதிகரிக்கும் எனவும் குறிப்புகளில் உள்ளது.

வரவிருக்கும் ஆண்டில் பாப்பரசர் பதவியில் மாற்றம் ஏற்படும் என நாஸ்ட்ராடாமஸால் கணிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, போப் போப் பிரான்சிஸின் வயது மற்றும் உடல்நிலையின் காரணமாக பாப்பரசர் பதவிக்கு புதிதாக ஒருவரை நியமிக்கும் சாத்தியக்கூறு உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

2024ஆம் ஆண்டில் சீனா மற்றும் அமெரிக்கா போன்ற பலம் பொருந்திய நாடுகளுக்கிடையில் நவீன யுகத்தின் பனிபோர்கள் ஏற்படக்கூடும் என நாஸ்ட்ராடாமஸால் கூறப்பட்டுள்ளது.

மேலும் இது போன்ற நாடுகளின் கடற்படைகளுக்கிடையிலான யுத்தமும் அதிகரிக்கும் என அவரால் புதிர் வசனங்களின் மூலம் விவரிக்கப்பட்டுள்ளது.

நாஸ்ட்ராடாமஸின் கணிப்புகளின் படி வருகின்ற ஆண்டில் புவிசார் அரசியலில் ஒரு பதற்ற நிலை தொடரும் என பலரும் கூறி வருகின்றனர்.

நாஸ்ட்ராடாமஸின் கணிப்புகளின் உண்மைத்தன்மை குறித்து பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்கள் பலருக்கும் பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றது.

எனினும், அவரின் கருத்துக்கள் கடத்த கால, சமகால மற்றும் எதிர்கால அரசியலில் ஒரு நுணுக்கமான பார்வையை உலக மக்களுக்கு எடுத்துரைக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...