tamilni 15 scaled
உலகம்செய்திகள்

அரியணையை என் மகனுக்கு விடுகிறேன்! 52 ஆண்டுகளுக்கு பின் பொறுப்பை துறந்த ராணி

Share

டென்மார்க் ராணி இரண்டாம் மார்கிரேத் தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் ராணியாக இரண்டாம் மார்கிரேத் (Margrethe) 1972ஆம் ஆண்டு அரியணை ஏறினார்.

இந்த நிலையில் புத்தாண்டு உரையில் பேசிய மார்கிரேத், ராணி எனும் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

83 வயதாகும் ராணி மார்கிரேத், கடந்த பிப்ரவரி மாதம் அவருக்கு முதுகு அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

இதுகுறித்து மார்கிரேத் கூறுகையில், ‘அறுவை சிகிச்சை இயற்கையாகவே எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க வழி வகுத்தது – அடுத்த தலைமுறைக்கு பொறுப்பை விட்டுச் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. இப்போதுதான் சரியான நேரம் என்று முடிவு செய்துவிட்டேன்.

14 ஜனவரி 2024 அன்று – என் அன்பான தந்தைக்குப் பிறகு, நான் 52 ஆண்டுகளுக்குப் பிறகு, நான் டென்மார்க்கின் ராணியாக பதவி விலகுவேன். நான் அரியணையை என் மகன் பட்டத்து இளவரசர் Frederik-யிடம் விட்டு விடுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

டென்மார்க்கில் முறையான அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றம் மற்றும் அதன் அரசாங்கத்திடம் உள்ளது.

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...