rtjy 197 scaled
உலகம்செய்திகள்

ஆதாரத்துடன் குற்றம் சுமத்திய அமெரிக்கா

Share

ஆதாரத்துடன் குற்றம் சுமத்திய அமெரிக்கா

ரஷ்யா – வட கொரியா இடையே ஆயுதப் பரிமாற்ற ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருப்பதாகக் ஆதாரத்துடன் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவிக்கையில்,

சமீபத்திய வாரங்களில் வட கொரியா 1,000 க்கும் மேற்பட்ட இராணுவ தளபாடங்கள் மற்றும் வெடிமருந்துகளை ரஷ்யாவிற்கு வழங்கியதாக அமெரிக்காவுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

ரஷ்யாவும் உக்ரைனும் போரில் ஈடுபட்டுள்ள நிலையில், வட கொரியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே ஆழமாகிவரும் இராணுவ உறவு கவலை அளிக்கிறது.

இந்த ஆயுதம் வினியோகம், உக்ரைனிய நகரங்களை தாக்க பயன்படுவதுடன், உக்ரைன் பொதுமக்களை கொல்லவும் பயன்படும்.

மேலும், ரஷ்யாவின் சட்ட விரோத போர் தொடர வழி வகுக்கும்” என்றார்.

சமீபத்தில் கிழக்காசிய நாடான வட கொரியாவின் ஜனாதிபதி கிம் ஜாங் உன், ஆறு நாட்கள் அரசு முறை பயணமாக ரஷ்யாவுக்கு சென்றிருந்தார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், அந்நாட்டுக்கு வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் சென்றது, தென் கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்தித்த கிம் ஜாங் உன், ஆயுதங்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் குறித்து கேட்டறிந்ததாக பல்வேறு தகவல்கள் வெளிவந்திருந்தன.

இதையடுத்து ரஷ்ய பயணத்தை முடித்த வட கொரிய ஜனாதிபதி, பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய தொடருந்தில் நாடு திரும்பியிருந்தார்.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...