image 9f55943f1b 1
செய்திகள்இலங்கை

“மயானத்திலிருந்து மக்கள் சேவையா..!”: சஜித் பிரேமதாசவின் அறிக்கை

Share

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், “மயானத்தில் இருந்து கொண்டு மக்கள் சேவை செய்ய முடியாது. இந்தக் கொலை கலாசாரத்திற்கு இடமளிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

வடகொழும்பில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், பின்வரும் கருத்துக்களை வெளியிட்டார், வெலிகம பிரதேச சபைத் தலைவர் கொல்லப்பட்டார். அவர் தலைவராகத் தெரிவு செய்யப்படுவதைத் தடுக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, அவை அனைத்தும் பொய்யாக்கப்பட்டு அவர் வெற்றி பெற்றார்.

தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக எழுத்து மூலம் அறிவித்தும் பாதுகாப்பு கோரினார், ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. இத்தகைய நிலையில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளால் மக்கள் தினத்தை நடத்த முடியுமா?

ஜே.வி.பிக்கு (JVP) மக்கள் தினத்தை நடத்தத் தெரியாது என்றும், அவர்களுக்கு மக்கள் தினம் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
TNA
இலங்கை

சி.வி.கே.சிவஞானத்தின் வீட்டிற்கு வந்த சங்கு.

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று...

sumanthiran
இலங்கை

சுமந்திரன் வேண்டாம் – வெடித்தது போராட்டம்.

நாளைய தினம், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நடைபெறவுள்ள நடைபவனிக்கு சட்டத்தரணி...

selvam
இலங்கை

தமிழ் மற்றும் முஸ்லீம் கடசிகள் ஒன்றிணைவு – சொற்போரில் ஈடுபட்டுள்ள இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டமைப்பை கூட்டுச் சாம்பார் என்றும், இது...

இலங்கை

மின்னல் தாக்கத்தினால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.

ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர், நாட்டில் மின்னல் தாக்கங்களால் உயிரிழப்பதாக இன்று கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி...