Nigeria iii
உலகம்செய்திகள்

நைஜீரியா – சிறை தகர்ப்பு! – 240 கைதிகள் தப்பிப்பு

Share

நைஜீரியா – கோசி மாகாணத்தில் ஹப்பா நகரிலுள்ள சிறைச்சாலை ஒன்றில் தடுப்புச் சுவரை சக்தி வாய்ந்த வெடி குண்டு மூலம் தகர்த்து உள் நுழைந்த பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதன் மூலம் சிறையிலிருந்து 240 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.  2 சிறைக்கைதிகள் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சிறையில் 224 விசாரணை கைதிகள் மற்றும் 70 குற்றவாளிகள் உள்ளிட்ட மொத்தம் 294 கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறைச்சாலை மீது பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பயங்கரவாதிகள் சிறைச்சாலையின் தடுப்பு சுவரில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வைத்து தகர்த்து உள்ளே நுழைந்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

தப்பியோடிய கைதிகளை பிடிக்க தேடுதல் வேட்டை துரிதகதியில் நடைபெறுகிறது. கைதிகள் பற்றிய தகவலை இன்டர்போல் அமைப்பிடம் ஒப்படைத்துள்ளோம். கைதிகளை தப்பவைத்து பயங்கரவாதிகளையும் விரைவில் பிடிப்போம் – என அந் நாட்டு உள்துறை அமைச்சர் ராப் அரெக்பசுலோ தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...