உலகம்செய்திகள்

வெளிநாட்டவர்களுக்கு ஒரு ஆறுதலான செய்தி: உள்துறை அலுவலகம் அடித்தது அந்தர் பல்டி

tamilni 401 scaled
Share

வெளிநாட்டவர்களுக்கு ஒரு ஆறுதலான செய்தி: உள்துறை அலுவலகம் அடித்தது அந்தர் பல்டி

பிரித்தானியா அறிமுகம் செய்யவிருக்கும் புதிய புலம்பெயர்தல் விதிகள் வெளிநாட்டவர்கள் பலருக்கு அச்சத்தையும் சந்தேகத்தையும் உருவாக்கிய நிலையில், தற்போது அந்த விடயம் தொடர்பாக உள்துறை அலுவலகம் புதிய தகவலொன்றை வெளியிட்டுள்ளது.

பிரித்தானியா புதிய புலம்பெயர்தல் விதிகள் சிலவற்றை அறிமுகம் செய்ய உள்ள நிலையில், அவற்றில் ஒன்று, ஆண்டொன்றிற்கு 38,700 பவுண்டுகள் வருவாய் உள்ளவர்கள் மட்டுமே, பிரித்தானியர்கள் அல்லாத தங்கள் குடும்பத்தினரை, அதாவது, கணவன் அல்லது மனைவி மற்றும் பிள்ளைகளைக் கூட, தங்களுடன் பிரித்தானியாவில் வைத்துக்கொள்ளமுடியும் என்று கூறியது.

பிரித்தானியர்களல்லாத தங்கள் குடும்பத்தினருடன் பிரித்தானியாவில் வாழ்பவர்கள், இந்த செய்தி தங்களுக்கு கடும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், பிரித்தானியரல்லாத தங்கள் குடும்பத்தினரை அவர்களுடைய நாட்டுக்கு திருப்பி அனுப்பிவிடவேண்டுமா என்னும் கேள்வியும் எழுந்தது.

அதாவது, பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளதாக கூறி, புலம்பெயர்தலைக் கடுப்படுத்துவதற்காகவே உள்துறைச் செயலர் இந்த விதிகளை அறிமுகம் செய்ய இருந்தார்.

குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால், வெளிநாட்டு மாணவர்களும், முதியவர்களைக் கவனித்துக்கொள்ளும் பணியாளர்களும், தங்கள் குடும்பத்தினரை பிரித்தானியாவுக்கு அழைத்து வருவதைத் தடுப்பதற்காக, அவர்களைக் குறிவைத்தே இந்த விதியைக் கொண்டு வர திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது.

அதாவது, முன்னர் அறிவிக்கப்பட்டது போல, ஆண்டொன்றிற்கு 38,700 பவுண்டுகள் வருவாய் உள்ளவர்கள் மட்டுமே, பிரித்தானியர்கள் அல்லாத தங்கள் குடும்பத்தினரை தங்களுடன் பிரித்தானியாவில் வைத்துக்கொள்ளமுடியும் என்னும் விதியில், 38,700 பவுண்டுகள் என்னும் தொகை, ஆண்டுக்கு 29,000 பவுண்டுகள் என மாற்றப்பட்டுள்ளது.

உள்துறை அலுவலக அமைச்சரான Lord Sharpe of Epsom, இப்போதைக்கு, ஆண்டுக்கு 29,000 பவுண்டுகள் வருவாய் உள்ள பிரித்தானியர்கள், பிரித்தானியர்களல்லாத தங்கள் குடும்பத்தினரை தங்களுடன் பிரித்தானியாவில் வைத்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

என்றாலும், இது இப்போதைக்குத்தான் என்றும், பின்னர் இந்த தொகை உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், எப்போது அந்த மாற்றங்கள்செய்யப்படும் என்பது குறித்து சரியான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாததால், மாற்றி மாற்றி அறிவிப்புகளை வெளியிடும் உள்துறை அலுவலகம், குழப்பம் உண்டாக்கிக்கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...