14 3
உலகம்செய்திகள்

இந்தியா பொய் சொல்கிறதா? ரஷ்யா, சீனா விசாரிக்க வேண்டும்! பாகிஸ்தான் அறைகூவல்

Share

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து ரஷ்யா, சீனா விசாரணை நடத்த வேண்டும் என பாகிஸ்தான் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதல் நடத்தியவர்களுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இதற்கு தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என பாகிஸ்தான் கூறியது. எனினும் இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில் ரஷ்யாவும், சீனாவும் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பாகிஸ்தான் விரும்புவதாக ஊடக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், ரஷ்ய ஊடகமான RIA Novosti செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில்,

“இந்த நெருக்கடியில் ரஷ்யா அல்லது சீனா அல்லது மேற்கத்திய நாடுகள் கூட மிகவும் நேர்மையான பங்கை வகிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். மேலும் அவர்கள் ஒரு புலனாய்வுக் குழுவை அமைக்கலாம்.

இந்தியா அல்லது மோடி பொய் சொல்கிறாரா என்பதை விசாரிக்கும் இந்த பணியை அவர்களுக்கு அளிக்க வேண்டும். ஒரு சர்வதேச குழு கண்டுபிடிக்கட்டும்” என தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
03 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விநியோகம்: இந்தியாவிடம் கோரிக்கை விடுத்த அண்டை நாடுகள்!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழல் காரணமாக உலகளாவிய எரிசக்தி சந்தையில் நிலவும் நிச்சயமற்ற தன்மையால், இலங்கை,...

02 11
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுமக்களின் கருத்துகளைக் கோரும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!

2026-ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான (ஏப்ரல் – ஜூன்) மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதி...

01 11
செய்திகள்உலகம்பிராந்தியம்

மத்திய கிழக்கு கடல்வழிப் பதற்றம்: மேலும் மூன்று கப்பல்கள் மீது தாக்குதல்!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழலுக்கு மத்தியில், வளைகுடா பிராந்தியத்தின் கடல்வழிகளில் தாக்குதல்கள் தொடர்கின்றன....

30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...