23 64fd3a4dc8b66
உலகம்செய்திகள்

மோசமடையும் மொராக்கோ நிலநடுக்கம்: 2000-ஐ தாண்டும் பலி எண்ணிக்கை

Share

மோசமடையும் மொராக்கோ நிலநடுக்கம்: 2000-ஐ தாண்டும் பலி எண்ணிக்கை

மொராக்கோ நகரின் நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 2000-தை தாண்டி இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொராக்கோ நகரின் மாரகெச் நகரில் இரவில் 6.8 ரிக்டர் என்ற அளவில் பயங்கர நிலநடுக்கம் ஒன்று பதிவானது, இதில் கட்டிடங்கள் தரையோடு தரையாக இடிந்து விழுந்தன.

இரவு நேரத்தில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் என்பதால் வீடுகளில் தூங்கி கொண்டு இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஆபத்தில் சிக்கினர்.

முதற்கட்ட தகவல்களின் படி ஆயிரம் பேர் வரை உயிரிழந்து இருப்பதாகவும், நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்து இருப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் மொராக்கோ நாட்டின் உள்துறை அமைச்சர் வழங்கிய தகவலின் படி, நிலநடுக்கத்தால் இதுவரை 2,012 பேர் உயிரிழந்து இருப்பதாக தெரியவந்துள்ளது.

அத்துடன் 2,059 பேர் படுகாயமடைந்து இருப்பதாகவும் அதில் 1404 பேர் மோசமான நிலையில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. அத்துடன் மீட்பு படையினர் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடி வருகின்றனர்.

Share
தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...