அரசியல்உலகம்

திருமண நிகழ்ச்சியை சீர்குலைத்த மொராக்கோ நிலநடுக்கம்

Share

திருமண நிகழ்ச்சியை சீர்குலைத்த மொராக்கோ நிலநடுக்கம்

மொராக்கோவில் திருமண நிகழ்ச்சியில் இசைக் கச்சேரி நடந்து கொண்டு இருந்த போது பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து மக்கள் பாதியில் அலறியடித்து ஓடும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

மொராக்கோ நாட்டின் மாரகெச் நகரில் மக்கள் தூங்கி கொண்டு இருந்த போது ஏற்பட்ட 6.8 ரிக்டர் என்ற அளவில் பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை 2100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் இந்த நிலநடுக்கத்தில் 2,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருப்பதாகவும், அதில் 1404 பேர் வரை உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் மக்கள் தூங்கி கொண்டு இருந்த போது ஏற்பட்டுள்ளதால் நிலநடுக்க பாதிப்புகளில் இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மொராக்கோவில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் இசைக் கச்சேரி நடந்து கொண்டு இருந்த போது பயங்கர நிலநடுக்கம் குறுக்கிட்ட வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் இசைக் கச்சேரியில் கலந்து கொண்ட பாடகர், இசைக் கலைஞர்கள் மற்றும் விழாவில் கலந்து கொண்ட மக்கள் என பலர் மேடையை விட்டு வாசல் வழியாக தப்பியோடும் காட்சி இடம்பெற்றுள்ளது.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 15
உலகம்செய்திகள்

ஈரானின் திடீர் முடிவு.. சர்வதேசத்திடமிருந்து அணுசக்தி தகவல்களை மறைக்க திட்டம்!

சர்வதேச அணுசக்தி நிறுவனத்துடனான (IAEA) ஒத்துழைப்பை நிறுத்துவதற்கான ஒரு சட்டத்திற்கு ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன்...

Murder Recovered Recovered Recovered 11
உலகம்செய்திகள்

தரையிறங்குவதற்கு சற்று முன்னர் விபத்துக்குள்ளான சோமாலிய விமானம் : மூவர் பலி

சோமாலியாவில் ஆபிரிக்கா இராணுவத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும்...

Murder Recovered Recovered Recovered 10
உலகம்செய்திகள்

கனடா பெண்ணுக்கு யாழில் நேர்ந்த சோகம்

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணொருவர் பட்டா ரக வாகனம் மோதியதால் நேற்றையதினம்(02) உயிரிழந்துள்ளார். கண்டி...

Murder Recovered Recovered Recovered 8
உலகம்செய்திகள்

இந்தோனேசியாவில் படகு மூழ்கியதில் 38 பேர் மாயம்

இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே 65 பேருடன் சென்ற பயணிகள் படகு மூழ்கியதில் 38 பேர்...