21
உலகம்செய்திகள்

மோடியின் பயணம் சீனா ரஷியா பற்றியது அல்ல!!

Share

மோடியின் பயணம் சீனா ரஷியா பற்றியது அல்ல!!

இந்திய பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். ஐ.நா. தலைமையகத்தில் இன்று நடைபெறும் சர்வதேச யோகா தினத்தில் கலந்து கொள்கிறார். அதன்பின் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்கிறார். அப்போது இருநாட்டு தலைவர்களும் பல்வேறு அம்சங்கள் குறித்து பேசவாய்ப்புள்ளது.

குறிப்பாக இந்தோ-பசிபிக் பாதுகாப்பு குறித்து பேசப்படும் எனத்தெரிகிறது. ஆனால் ரஷியா அல்லது சீனா குறித்து பேச்சு இடம்பெறாது என வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கிர்பி கூறுகையில் ”இந்திய பிரதமர் மோடியின் வருகை சுதந்திரமான, திறந்த, வளமான மற்றும் பாதுகாப்பான இந்தோ- பசிபிக் பகுதிக்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டை வலுப்படுத்தும்.

இருநாட்டின் உறவை மேம்படுத்துவதற்கான சந்திப்பாக இருக்கும். இதுதான் எங்களுக்கு முக்கியம். இந்த சந்திப்பு மூலம் பிரதமர் மோடியையோ அல்லது இந்திய அரசையோ வேறு ஏதாவது செய்ய வற்புறுத்துவது அல்ல. வெள்ளை மாளிகையில் இது ஒரு பெரிய வாரம். மோடியின் இந்த பயணம் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள வலுவான உறவுகளை உறுதிப்படுத்துவதுடன் நமது மூலோபாய கூட்டாண்மையை உயர்த்தும். இந்தியா- அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு மேம்படுத்த விரும்புகிறோம். இந்தியா மபெரும் சக்தியாக உருவெடுக்க நாங்கள் ஆதரவு அளிப்போம். மோடியின் அமெரிக்க வருகை ரஷியா அல்லது சீனா குறித்தது அல்ல” என்றார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....