25
உலகம்செய்திகள்

கணவனை மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற மனைவி: பின்னர் நடந்த பயங்கரம்

Share

மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி தன் கணவனை அழைத்துச் சென்ற பெண்ணொருவர், அவர் மீது காரை ஏற்றிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் வாழும் கணவர்கள் எல்லாம் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டுதான் வாழவேண்டும் போலிருக்கிறது.

ராஜா ரகுவன்ஷியை அவரது மனைவியான சோனம் கொன்றது துவங்கி, சில வட மாநிலங்களில் கணவர்கள் அச்சத்துடனேயே வாழும் நிலை உருவாகியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பூஜா என்னும் பெண், தன் கணவரான பிக்குவை மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்வதாகக் கூறி Gaya என்னுமிடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

ஆனால், வீட்டுக்குத் திரும்பும் வழியில், தன் காதலனான கமலேஷ் யாதவ் என்பவருடன் சேர்ந்து, பிக்கு மீது காரை ஏற்றிக் கொன்றுள்ளார் பூஜா.

பிக்கு சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, பூஜாவை பொலிசார் கைது செய்ய, விசாரணையில் தன் காதலனுடன் சேர்ந்து தன் கணவரைக் கொலை செய்ததை பூஜா ஒப்புக்கொண்டுள்ளார்.

தலைமறைவாகிவிட்ட கமலேஷ் யாதவை பொலிசார் தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.

Share
தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...