21 5
உலகம்செய்திகள்

30 வருடங்களாக பெண் வயிற்றில் இருந்த சிசு – கல்லாக மாறிய அதிசய நிகழ்வு

Share

30 வருடங்களாக பெண் வயிற்றில் இருந்த சிசு, கால்சியம் கல்லாக மாறியுள்ளது.

அல்ஜீரியாவை சேர்ந்த 82 வயதான மூதாட்டி, வயிற்று வலி காரணமாக சிகிச்சை பெற மருத்துவமனை சென்றுள்ளார்.

அங்கு அவருக்கு சிடி ஸ்கேன் செய்யப்பட்டதில், அவரது வயிற்றில் இருந்த சிசு கல் போன்று மாறியிருப்பது தெரிய வந்தது.

30 வருடங்களுக்கு முன்னர், அவர் கர்ப்பமாக இருந்தபோது, வயிற்றில் இருந்த சிசு, 7 மாதங்களில் இறந்து விட்டது.

30 வருடங்களாக வயிற்றில் இருந்த அந்த இறந்த சிசு, கால்சியத்தால் சூழப்பட்டு கல்லாக மாறியுள்ளது. இது lithopedion என அழைக்கப்படுகிறது.

கர்ப்பப்பையில், கர்ப்பம் உருவாகாமல் வயிற்றில் கர்ப்பம் உருவாகும் போது இந்த lithopedion உண்டாகிறது.

கருவுக்கு போதுமான இரத்த விநியோகம் இல்லாமல் சிசு இறக்கும் போது, கருவை வெளியேற்ற உடலுக்கு எந்த வழியும் இல்லை.

உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலம், உடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்க இது போன்று கால்சியம் மூலம் கல்லாக மாற்றி விடுவதாக மருத்துவர் கிம் கார்சி தெரிவித்துள்ளார்.

இது அரிதான ஒன்று என்றும், உலகத்தில் இதுவரை 300 நிகழ்வுகள் மட்டுமே இவ்வாறு நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 122
செய்திகள்உலகம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை $100-ஐத் தாண்டியது: ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிடுகிறது அமெரிக்கா!

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகச் செல்லும்...

world 121
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மாலை நாட்டின் பல பகுதிகளில் கனமழை: பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (ஏப்ரல் 13, 2026) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை...

world 120
செய்திகள்உலகம்

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: அவசர உதவிகளை அறிவித்தது ஈராக்!

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சுடானி,...

world 119
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு வழிபாட்டிற்காக நாளை இரவு முழுவதும் திறக்கப்படும் ருவன்வெலி மகா சேயா!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆசிகளைப் பெற வரும் பக்தர்களுக்காக, அனுராதபுரத்தில் உள்ள வரலாற்றுச்...