25
உலகம்செய்திகள்

கணவனை மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற மனைவி: பின்னர் நடந்த பயங்கரம்

Share

மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி தன் கணவனை அழைத்துச் சென்ற பெண்ணொருவர், அவர் மீது காரை ஏற்றிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் வாழும் கணவர்கள் எல்லாம் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டுதான் வாழவேண்டும் போலிருக்கிறது.

ராஜா ரகுவன்ஷியை அவரது மனைவியான சோனம் கொன்றது துவங்கி, சில வட மாநிலங்களில் கணவர்கள் அச்சத்துடனேயே வாழும் நிலை உருவாகியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பூஜா என்னும் பெண், தன் கணவரான பிக்குவை மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்வதாகக் கூறி Gaya என்னுமிடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

ஆனால், வீட்டுக்குத் திரும்பும் வழியில், தன் காதலனான கமலேஷ் யாதவ் என்பவருடன் சேர்ந்து, பிக்கு மீது காரை ஏற்றிக் கொன்றுள்ளார் பூஜா.

பிக்கு சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, பூஜாவை பொலிசார் கைது செய்ய, விசாரணையில் தன் காதலனுடன் சேர்ந்து தன் கணவரைக் கொலை செய்ததை பூஜா ஒப்புக்கொண்டுள்ளார்.

தலைமறைவாகிவிட்ட கமலேஷ் யாதவை பொலிசார் தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.

Share
தொடர்புடையது
05 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டிகைக் காலத்தில் இணைய மோசடிகள் அதிகரிப்பு: எச்சரிக்கையுடன் இருக்குமாறு இலங்கை கணினி அவசர பிரிவு அறிவுறுத்தல்!

எதிர்வரும் பண்டிகைக் காலங்களை முன்னிட்டு, இணையத்தில் பகிரப்படும் போலியான விளம்பரங்கள் மற்றும் இணைப்புகள் (Links) மூலம்...

04 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சி: 2026-ஆம் ஆண்டில் 600,000 சுற்றுலாப் பயணிகளைக் கடந்த சாதனை!

இலங்கையின் சுற்றுலாத்துறை இந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே பெரும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...

03 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல பகுதிகளில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதிய வானிலை அறிக்கையின்படி, இன்று (மார்ச் 13) நாட்டின் பல...

02 12
செய்திகள்உலகம்

பனிமலை ஏறும் போது நிலைதடுமாறி சரிந்த மலையேற்ற வீரர்: வைரலாகும் திக் திக் காட்சிகள்

உலகின் மிக உயரமான சிகரங்களை நோக்கிய மலையேற்றப் பயணங்கள் சாகசம் நிறைந்ததாக இருந்தாலும், அவை எந்த...