2500 பேரை காப்பாற்றிய சிங்கப்பெண்- யார் இந்த மம்தா சிங்?
உலகம்செய்திகள்

2500 பேரை காப்பாற்றிய சிங்கப்பெண்- யார் இந்த மம்தா சிங்?

Share

2500 பேரை காப்பாற்றிய சிங்கப்பெண்- யார் இந்த மம்தா சிங்?

மணிப்பூரில் இரண்டு மாதங்களுக்கு மேலாக மோதல்கள் நீடித்து வரும் சூழலில், ஹரியானாவிலும் போராட்டம் வெடித்துள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இருதரப்பினருக்கு இடையேயான மோதல் தீ வைப்பு, கடைகளை அடித்து நொறுக்குதல் என இதுவரையிலும் 6 பேரின் உயிரை எடுத்துள்ளது.

இதுதொடர்பில் கவலையளிக்கும் செய்திகள் வெளியாகி வருகின்றன, இதன்போது 2500 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளார் மம்தா சிங்.

ஹரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில் இரு தரப்பினர் இடையே நடந்த மோதல் மற்றும் கலவரத்தின்போது 2500 பேர் நல்ஹர் மஹாதேவ் கோவிலில் அகப்பட்டுக்கொண்டனர்.

இந்த தகவலை அறிந்த உள்துறை அமைச்சர் அணில் விஜி உடனே அந்த இடத்தின் கூகிள் லொகேஷனை மம்தா சிங்கிற்கு அனுப்ப, அவர் காவல் படையினரோடு அந்த இடத்திற்கு விரைந்து அவர்களை மீட்டார்.

பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு மருத்துவப் படிப்பு படித்து வந்த மம்தாவுக்கு அதில் ஏனோ பெரிய ஈடுபாடில்லை. அதனால் மருத்துவ படிப்பை பாதியிலே நிறுத்திவிட்டு தேர்வெழுதி 1996ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியானார்.

காவல்துறைக்கு இவரது தொடர்ச்சியான பங்களிப்பு இவருக்கு நன்மதிப்பையும் மரியாதையையும் பெற்று தந்தது.

மனித உரிமை ஆணையத்திற்கான விசாரணை, மேற்கு வங்காளம் மற்றும் சட்டிஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற அப்ரேஷன்களின் போது மனிதஉரிமை மீறல்களை கையாண்டது என பல நடவடிக்கைகள் குறித்து உச்சநீதிமன்றம் இவரை பாராட்டியுள்ளது.

அதோடு அவரின் காவல்த்துறை சேவையை பாராட்டும் விதமாக 2022 குடியரசு தினத்தின் போது ஜனாதிபதியால் விருது வழங்கப்பட்டது.

ரகசிய வலைப்பின்னல்கள் மூலம் குற்றத்தை களைவது மற்றும் மாபியா குழுக்களை ஒழிப்பதில் இவர் பங்கு முக்கியமானதாகும்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
26 6978fa83d48ed
செய்திகள்உலகம்

சீனா – ஜப்பான் இடையே விமானப் போக்குவரத்து கடும் பாதிப்பு: 49 வழித்தடங்களில் சேவைகள் ரத்து; பயணிகளுக்குக் கட்டணத்தை மீள வழங்கத் தீர்மானம்!

சீனா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான விமானப் போக்குவரத்தில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பெப்ரவரி...

1769561293 Sri Lanka former President Ranil Wickremesinghe Colombo Court 6
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான பொதுச் சொத்து முறைகேடு வழக்கு: இன்று மீண்டும் நீதிமன்றில் விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கு, இன்று...

GettyImages 2220430732
உலகம்செய்திகள்

அமெரிக்கா – கனடா இடையே போர் விமானப் போர்: F-35-ஐ வாங்கத் தவறினால் வான்வெளியை ஆக்கிரமிப்போம்– அமெரிக்க தூதுவர் எச்சரிக்கை!

கனடா தனது வான் பாதுகாப்புக்காக அமெரிக்காவின் F-35 போர் விமானங்களை வாங்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யத்...

26 69753e82ece93
உலகம்செய்திகள்

மதுரோ கைது: Discombobulator என்ற ரகசிய ஆயுதத்தைப் பயன்படுத்தியதாக டொனால்ட் ட்ரம்ப் அதிரடித் தகவல்!

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மீதான தாக்குதலில், அமெரிக்கப் படைகள் ‘Discombobulator’ என்ற மர்மமான ரகசிய...