4 11
உலகம்செய்திகள்

ஹமாஸ் படைகளிடம் சிக்கிய பணயக்கைதிகள்… இஸ்ரேலில் நெதன்யாகு அரசுக்கு எதிராக இறுகும் மக்கள் போராட்டம்

Share

ஹமாஸ் படைகளிடம் சிக்கிய பணயக்கைதிகள்… இஸ்ரேலில் நெதன்யாகு அரசுக்கு எதிராக இறுகும் மக்கள் போராட்டம்

இஸ்ரேலிய பணயக் கைதிகளின் குடும்பங்கள் மற்றும் அவர்களது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்டவர்களின் அவலநிலை குறித்து அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்க ஐந்து நாள் பேரணியின் முடிவில் சனிக்கிழமை ஜெருசலேமை வந்தடைந்துள்ளனர்.

குறித்த 5 நாள் பேரணியில் சுமார் 20,000 பேர்கள் கலந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல் அவிவ்-ஜெருசலேம் பிரதான சாலையில் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நெதன்யாகு அரசாங்கத்திற்கு அழுத்தம் அளிக்க வேண்டும் என்றே பாதிக்கப்பட்ட மக்கள் பேரணியில் கலந்து கொண்டுள்ளனர். நெதன்யாகு அரசாங்கம் தங்களை சந்திக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் அவர்களின் திட்டம் என்ன என்பதையும் தெரிவிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இனிமேலும் காத்திருக்க முடியாது எனவும், உரிய நடவடிக்கைகளை உடனே எடுக்கவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அத்துடன் பணயக்கைதிகளை மீட்க எதையும் இழக்கவும் அரசாங்கம் தயாராக வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தெரிவித்துள்ளனர்.

அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் படைகள் முன்னெடுத்த அதிரடி தக்குதலைத் தொடர்ந்து 240 இஸ்ரேலிய மக்களையும் பிடித்து சென்றனர். குறித்த தாக்குதல் சம்பவத்தில் 1,200 இஸ்ரேலிய மக்கள் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், ஹமாஸ் படைகளை ஒழிப்பதாக கூறி இஸ்ரேல் முன்னெடுக்கும் தாக்குதல்களில் சிக்கி பணயக்கைதிகளாக இருப்பவர்களும் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தை அவர்களின் உறவினர்கள் பலர் வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆனால் காஸா மீதான தாக்குதல் பணயக்கைதிகளை மீட்கும் பொருட்டு முன்னெடுப்பதாக இஸ்ரேல் அரசாங்கம் தரப்பு கூறி வருகிறது. இதனிடையே, ஹமாஸ் தாக்குதலை அடுத்து தங்கள் அரசாங்கம் கண்மூடித்தனமாக செயல்படுவதாக இஸ்ரேல் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இஸ்ரேல் தாக்குதலை அதிகரித்தால் பணயக்கைதிகள் கொல்லப்படுவார்கள் என தொடக்கத்தில் மிரட்டி வந்த ஹமாஸ், இஸ்ரேலிய தாக்குதலில் சில பணயக்கைதிகள் கொல்லப்பட்டதாக தற்போது தெரிவித்துள்ளது.

ஆனால், இஸ்ரேல் ராணுவத்திடம் பல ஆண்டுகளாக சிக்கி சிறையில் உள்ள 7,000 பாலஸ்தீன மக்கள் தொடர்பில் எந்த தகவலும் இல்லை என்றே கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...