5 10
உலகம்செய்திகள்

லண்டனில் இந்திய வம்சாவளி இளைஞர் படுகொலையில் மேலும் ஒருவர் கைது

Share

லண்டனில் இந்திய வம்சாவளி இளைஞர் படுகொலையில் மேலும் ஒருவர் கைது

மேற்கு லண்டனில் இந்திய வம்சாவளி இளைஞர் படுகொலையில் ஏற்கனவே மூவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ள நிலையில், தற்போது 71 வயதான நாலாவது நபர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு லண்டனில் 17 வயதான இந்திய வம்சாவளி சீக்கிய இளைஞர் Simarjeet Singh கத்தியால் தாக்கி படுகொலை செய்யப்பட்டார். தகவலை அடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், படுகாயங்களுடன் இளைஞரை மீட்டுள்ளனர்.

ஆனால் காயங்கள் காரணமாக சம்பவயிடத்திலேயே இளைஞர் Simarjeet Singh மரணமடைந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்திருந்தது. இந்த வழக்கு விசாரணையில் Southall பகுதியை சேர்ந்த 21 வயது அமந்தீப் சிங், 27 வயது மஞ்சித் சிங், மற்றும் 31 வயது அஜ்மீர் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மீது கொலை வழக்கும் பதியப்பட்டுள்ளது. இந்த நிலையில், 71 வயதான போரன் சிங் என்பவரை கைது செய்துள்ள பொலிசார், அவர் மீது கொலை வழக்கு பதிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் நடந்த பகுதியானது மிகவும் அமைதியான, இதுபோன்ற சம்பவங்கள் சமீப காலத்தில் நடந்ததில்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இளைஞரின் அலறல் சத்தம் கேட்டு பலர் கண்விழித்துள்ளதாக கூறியுள்ளனர்.

அவர்களே பொலிசாருக்கும் தகவல் அளித்துள்ளனர். 17 வயதேயான Simarjeet Singh மீது குழு சேர்ந்து தாக்குதல் முன்னெடுத்துள்ளதன் பின்னணி குறித்தும் விசாரிக்கப்படும் என்றும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பில் மேலும் தகவல் தெரியவரும் பொதுமக்கல் விசாரணை அதிகாரிகளுக்கு உதவ முன்வர வேண்டும் என பொலிஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...