உலகம்
ஹமாஸின் திட்டத்தை அம்பலப்படுத்திய இஸ்ரேல்
ஹமாஸின் திட்டத்தை அம்பலப்படுத்திய இஸ்ரேல்
ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச்சென்ற பணையக்கைதிகளை வைத்து அவர்கள் தீட்டும் திட்டத்தை இஸ்ரேல் கண்டறிந்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பினர் 240 பிணைக்கைதிகளை கடத்திச் சென்றனர். இந்நிலையில் காசாவில் பல்வேறு வைத்தியசாலைகள் இருக்கும்போது பிணைக்கைதிகளை குறிப்பாக அல்-ஷிபா வைத்தியசாலைக்குக்கொண்டு வரக் காரணம் ஹமாஸின் சுரங்க வலைபின்னலின் மையமாக அல்-ஷிபா வைத்தியசாலை இருக்கின்றமை என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அங்கிருந்து ஹமாஸ் அமைப்பினர் எளிதாக பிணைக்கைதிகளை இடமாற்ற இயலும் என்பதற்காகவே அல்-ஷிபா வைத்தியசாலையை ஹமாஸ் குழுவினர் பயன்படுத்தினர் என இஸ்ரேல் பாதுகாப்பு படை விளக்கமளித்துள்ளது.
இஸ்ரேல்- ஹமாஸ் போர் 47-வது நாளாகத் தொடர்ந்து வருகிறது. கடந்த வாரம் காஸாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிபா மருத்துவமனையைச் சுற்றி நடந்த தாக்குதல் வைத்தியசாலைக்குள்ளும் தொடர்ந்தது.
இந்த நிலையில், அதில் ஹமாஸ் குழுவால் இஸ்ரேலில் இருந்து கடத்தி வரப்பட்ட பிணைக்கைதிகள் அல்-ஷிபா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளமை இஸ்ரேல் பாதுகாப்பு பிரிவு வெளியிட்டுள்ள காணொளியில் பதிவாகியுள்ளது.