இங்கிலாந்து மக்களுக்கு பேரிடி அதிகரிக்கும் வாடகை!
உலகம்செய்திகள்

இங்கிலாந்து மக்களுக்கு பேரிடி அதிகரிக்கும் வாடகை!

Share

இங்கிலாந்து மக்களுக்கு பேரிடி அதிகரிக்கும் வாடகை!

இங்கிலாந்தில் கடந்த சில மாதங்களாக வீட்டு வாடகை அதிகரித்துள்ளதாக ஹாம்ப்டன்ஸ் இன்டர்நேஷனல் எனும் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த ஏழு ஆண்டுகளோடு ஒப்பிடும்போது தற்போது வீட்டு வாடகை கட்டணம் மிகவும் உயர்ந்திருப்பதாக மேற்படி அமைப்பு தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்ததை விட 13 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பள உயர்வு ஏதும் இன்றி, அதிகரிக்கும் வீட்டு வாடகையினால் தங்களின் வருமானத்தின் பெரும்பகுதி பறிபோவதால் ஆண், பெண் இருபாலரும் மிகவும் சிரமப்படுகின்றனர் என ஹாம்ப்டன்ஸ் இன்டர்நேஷனலின் தலைவர் அனீஷா பெவரிட்ஜ் தெரிவித்துள்ளார்.

சராசரி 5 ஆண்டு நிலையான வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 6.01% ஆக உயர்ந்த பிறகு, இங்கிலாந்தில் கடன் செலவுகள் 14 ஆண்டு உச்சத்தை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும, எதிர்வரும் காலங்களில் குறைந்தளவே புதிய வீடுகளுக்கான தேவை இருக்கும் என்பதால், கட்டுமான நிறுவனங்கள் புதிய வீடுகளை கட்டுவதை கணிசமாக குறைத்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 6 2
செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் புதிய சகாப்தம்: கடவுச்சீட்டு சோதனை இல்லை, நீண்ட வரிசை இல்லை! – AI மூலம் விமான நிலையங்களில் முக ஸ்கேன் அனுமதி!

பிரித்தானியா, தனது விமான நிலையம் ஒன்றில், நவீன தொழில்நுட்பம் மூலம் கடவுச்சீட்டு சோதனை இல்லாமலே பயணிகளை...

skynews donald trump benjamin netanyahu 7080062
செய்திகள்உலகம்

ஊழல் வழக்கில் நெதன்யாகுவை மன்னிக்க வேண்டும்: ட்ரம்ப் கடிதத்துக்கு இஸ்ரேல் ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு!

ஊழல் வழக்குகளில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை (Benjamin Netanyahu) மன்னிக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி ஐசக்...

articles2FgwJ5r85aOgQuM4EhGVg6
அரசியல்இலங்கைசெய்திகள்

நுகேகொடைப் பேரணி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நினைவூட்டவே: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அழுத்தம் கொடுப்போம் – நாமல் ராஜபக்ச!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான பொதுப் பேரணி, அரசாங்கம் மக்களுக்கு...

25 6915d20fc755f
செய்திகள்அரசியல்இலங்கை

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மட்டுமே; சட்டத்தின் முன் அனைவரும் சமமே”: கார்த்திகை வீரர்கள் தினத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மாத்திரமே என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று நடைபெற்ற கார்த்திகை வீரர்கள்...