அரசியல்வாதிகளுக்கு இலவச உணவு! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு இலவச உணவு! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Share

அரசியல்வாதிகளுக்கு இலவச உணவு! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பாடகர் சமன் டி சில்வா உணவகம் ஒன்றின் ஊழியர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்திற்கு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்க தலைவர் அசேல சம்பத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

உணவகங்களில் உணவு சாப்பிட்ட பின்னர் கட்டணம் செலுத்தாதவர்களுக்கு உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் அதிகபட்ச தண்டனையை வழங்க வேண்டும்.

அதாவது சாப்பிட்டு பணம் செலுத்தாதவர்களுக்கு வெந்நீர் அல்லது கழிவு நீரை ஊற்றுமாறு உணவக உரிமையாளர்களுக்கு நான் உத்தரவிடுகிறேன். அல்லது அத்தகையவர்களின் முகத்தை பிரைட் ரைஸ் கலவை சட்டியால் நேரடியாக அடிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலவச உணவு யாருக்கும் கொடுக்க வேண்டாம்.ஹோட்டல், கேன்டீன் உரிமையாளர்கள் மிகவும் சிரமப்பட்டுத்தான் உணவுகளை தயார் செய்கிறார்கள். “சில அரச அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், பொது சுகாதார அதிகாரிகள், நுகர்வோர் விவகார அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் தங்கள் உணவைப் பணம் செலுத்தாமல் பெறுவது வழக்கம் என்றும் அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Kerala Drugs
இலங்கை

எரித்து அழிக்கப்பட கேரள கஞ்சா.

கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில்...

question mark
இலங்கை

செல்வந்தர்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி.

திடீரெனப் பணக்காரர்களாகியுள்ள சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொது மக்களை காவல்துறையினர் அண்மையில் கோரியிருந்த...

Gotabaya Rajapaksa 24
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய நெருங்கிய உறவினர்!

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக...

dengue original 1
இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்வு.

அண்மையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின்...