இலங்கை வைத்தியசாலைகளில் அதிகரிக்கும் மரணங்கள்!
இலங்கைசெய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் அதிகரிக்கும் மரணங்கள்!

Share

இலங்கை வைத்தியசாலைகளில் அதிகரிக்கும் மரணங்கள்!

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திர சிகிச்சையின் பின்னர் இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொழும்பு கண் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொஸ்கொட பொரலுகட்டிய தெற்கில் வசிக்கும் எச்.ஜி. ஹிமாலி பிரியதர்ஷினி வீரசிங்க என்ற 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த பெண்ணின் கண்ணில் இதற்கு முன்னர் கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் லென்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

இதன் பின்னரான சத்திரசிகிச்சையில் கண்ணில் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக நேற்று முன்தினம் (4.07.2023) மீண்டும் கண் வைத்தியசாலை வைத்தியர்களிடம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது வைத்தியரின் உத்தரவுக்கமைய, அதே கண்ணில் சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்காக அன்றைய தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நேற்று (5.07.2023) சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த அறுவை சிகிச்சைக்குப் பின்னர் சத்திரசிகிச்சைக்காக கொடுக்கப்பட்ட மயக்க மருந்தில் சுயநினைவை இழந்து விஷம் கலந்து அவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, சத்திரசிகிச்சைக்காக கொடுக்கப்பட்ட மயக்க மருந்தில் விஷம் கலந்துள்ளமையே இந்த மரணத்திற்கான காரணமாக இருக்கலாம் என குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...