வெளிநாடொன்றில் தூக்கிலிடப்பட்ட இலங்கையரின் ஆசை...!
இலங்கைஉலகம்செய்திகள்

வெளிநாடொன்றில் தூக்கிலிடப்பட்ட இலங்கையரின் ஆசை…!

Share

வெளிநாடொன்றில் தூக்கிலிடப்பட்ட இலங்கையரின் ஆசை…!

சில குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் குவைட்டில் ஐந்து பேருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இவ்வாறு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் இலங்கையர் ஒருவரும் உள்ளடங்கியிருந்தார்.

43 வயதான இலங்கையர் ஒருவரே இவ்வாறு தூக்கிலிடப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர், பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாபா கருத்து வெளியிட்டுள்ளார்.

“இந்த இலங்கையர் ஒன்றரை கிலோ கிராம் எடையுடைய ஐஸ் போதைப் பொருளும், 500 கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப்பொருளும் வைத்திருந்தார் என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.போதைப் பொருளை வைத்திருந்தார் என்பதே இந்த இலங்கையருக்கு எதிரான குற்றச்சாட்டாகும்” என தெரிவித்துள்ளார்.

தமது பூதவுடலை இலங்கைக்கு கொண்டு வந்து தாயிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென்பதே குறித்த இலங்கையரின் இறுதி விருப்பமாக அமைந்திருந்தது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...

fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...

death body
இலங்கை

கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பட்டதாரி இளைஞர் பலி!

காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் இடம்பெற்ற கட்டுமானப்...