tamilni 46 scaled
உலகம்செய்திகள்

பிரான்ஸ் தலைநகரில் இனவெறித் தாக்குதல்

Share

பிரான்ஸ் தலைநகரில் இனவெறித் தாக்குதல்

இஸ்லாமியர்கள் அதிகளவில் கொல்லப்படுவதாக தெரிவித்து விரக்தியடைந்த இளைஞன் ஒருவர் பரிஸில் ஈபிள் கோபுரம் அருகே கத்திகுத்து தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் ஈபிள் கோபுரம் அருகே நேற்று (02.12.2023) இரவு குறித்த நபரால் நடத்தப்பட்ட தாக்குதலில் ஜெர்மனியை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரான்ஸைச் சேர்ந்த 26 வயது இளைஞன் ஒருவரே இவ்வாறு கத்தி ஒன்றினை பயன்படுத்தி தாக்குதலில் ஈடுபட்டுள்ளதுடன் பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளதாக பிரான்ஸ் நாட்டின் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானா தனது x தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பலஸ்தீன் மற்றும் ஆப்கானிஸ்தானில் இஸ்லாமியர்கள் அதிகளவில் கொல்லப்படுவதால் விரக்தியில் இவ்வாறு செய்ததாக குறித்த இளைஞன் பொலிஸாரின் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

மேலும், இவர் ஏற்கனவே 4 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு 2020ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டு பொலிஸார் மற்றும் மன நல மருத்துவரின் கண்காணிப்பின் கீழ் வசித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 69024001ac0cb
இலங்கைசெய்திகள்

கைவிலங்குடன் மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய முக்கிய குற்றவாளி – போலீசார் தீவிர தேடுதல்!

அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தில் இருந்தவேளை திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தேக நபர் கைவிலங்குகளுடன்...

25 69024640d7629
உலகம்செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலின் கோரம்: காஸாவில் 46 சிறுவர்கள் உட்பட 104 உயிர்கள் பலி. 

போர்நிறுத்ததை மீறி காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 46 குழந்தைகள் உள்பட...

25 69020579437a3
இலங்கைசெய்திகள்

குழந்தைகள் மீதான வன்முறை குறித்த அதிர்ச்சியூட்டும் விவரங்கள் வெளிவந்தது

இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் சிறுவர் பாலியல் வன்முறை தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு...

25 6901f9eea7d4a
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் பலாலி காணி விடுவிப்பு குறித்து கொழும்பில் உயர் மட்டப் பேச்சுவார்த்தை.

யாழ்ப்பாணம்-பலாலி பகுதியில் மீதமுள்ள தனியார் நிலங்களை அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதை விரைவுபடுத்துவதற்காக இராணுவத்தினர் படிப்படியாக வெளியேறுவதை...