23 4
உலகம்செய்திகள்

காலிஸ்தான் தீவிரவாதியை கொலை செய்ய திட்டம்: அமெரிக்க நீதிமன்றில் முன்னிலையான இந்தியர்

Share

அமெரிக்க மண்ணில் வைத்து காலிஸ்தான் தீவிரவாதியான குர்பத்வந்த் சிங் பன்னுனை (Gurpatwant Singh Pannun),கொலை செய்வதற்கான சதியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிகில் குப்தா அமெரிக்க நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நிக் என்று அழைக்கப்படும் 53 வயதான குப்தா, நியூயோர்க்கில் காலிஸ்தானிய தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொல்லும் சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில், அமெரிக்க அரசாங்கத்தின் வேண்டுகோளின் அடிப்படையில் 2023 ஜூன் 30ஆம் திகதியன்று செக் குடியரசில் வைத்து கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார்.

அத்துடன் இந்த ஆண்டு ஜூன் 14ஆம் திகதி அவர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

இந்தநிலையில் குப்தா திங்களன்று மன்ஹாட்டனில் உள்ள பிராந்திய நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது தமது கட்சிக்காரர் குற்றமற்றவர் என்று கூறி குப்தாவின் சட்டத்தரணி நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்ததுடன் அவர் குற்றமற்றவர் என்பதற்கான வாதங்களையும் முன்வைத்தார்.

இதனையடுத்து எதிர்வரும் ஜூன் 28 ஆம் திகதி வரை விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விசாரணையின்போது முன்னிலையான அமெரிக்க சட்டமா அதிபர் மெரிக் கார்லேண்ட், அமெரிக்காவின் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் முயற்சிகளை நாடு பொறுத்துக்கொள்ளாது என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சீக்கிய பிரிவினைவாத இயக்கத்தை ஆதரித்ததற்காக ஒரு அமெரிக்க குடிமகனை குறிவைத்து படுகொலை செய்ய இந்திய அரச அதிகாரி ஒருவரால் இயக்கப்பட்டதாக கூறப்படும் சதித்திட்டத்தின் கீழ் நிகில் குப்தா, அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொள்வார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் குப்தா மீது வாடகைக்கு கொலை மற்றும் கொலைக்கு சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளன.

இந்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை இன்று விசாரணை நடைபெற்றபோது காலிஸ்தானிய ஆதரவாளர்கள் நீதிமன்றுக்கு வெளியில் பல்வேறு கோசங்களை எழுப்பினர்.

Share
தொடர்புடையது
European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...

arrested woman with handcuffs
உலகம்

நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக...

உமா குமரன்
உலகம்

பிரித்தானிய அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பில் ஈழத்தமிழ்ப் பெண்

இலங்கைத் தமிழரான உமா குமரன், பிரித்தானியாவின் வெளிநாட்டு அமைச்சகத்தில் இணை அமைச்சராக பதவி வகித்து வந்த...

us troops
உலகம்உலகம்

ஈரானின் தாக்குதல்களில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி.

ஜோர்டானில் ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன்...