23 4
உலகம்செய்திகள்

காலிஸ்தான் தீவிரவாதியை கொலை செய்ய திட்டம்: அமெரிக்க நீதிமன்றில் முன்னிலையான இந்தியர்

Share

அமெரிக்க மண்ணில் வைத்து காலிஸ்தான் தீவிரவாதியான குர்பத்வந்த் சிங் பன்னுனை (Gurpatwant Singh Pannun),கொலை செய்வதற்கான சதியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிகில் குப்தா அமெரிக்க நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நிக் என்று அழைக்கப்படும் 53 வயதான குப்தா, நியூயோர்க்கில் காலிஸ்தானிய தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொல்லும் சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில், அமெரிக்க அரசாங்கத்தின் வேண்டுகோளின் அடிப்படையில் 2023 ஜூன் 30ஆம் திகதியன்று செக் குடியரசில் வைத்து கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார்.

அத்துடன் இந்த ஆண்டு ஜூன் 14ஆம் திகதி அவர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

இந்தநிலையில் குப்தா திங்களன்று மன்ஹாட்டனில் உள்ள பிராந்திய நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது தமது கட்சிக்காரர் குற்றமற்றவர் என்று கூறி குப்தாவின் சட்டத்தரணி நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்ததுடன் அவர் குற்றமற்றவர் என்பதற்கான வாதங்களையும் முன்வைத்தார்.

இதனையடுத்து எதிர்வரும் ஜூன் 28 ஆம் திகதி வரை விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விசாரணையின்போது முன்னிலையான அமெரிக்க சட்டமா அதிபர் மெரிக் கார்லேண்ட், அமெரிக்காவின் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் முயற்சிகளை நாடு பொறுத்துக்கொள்ளாது என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சீக்கிய பிரிவினைவாத இயக்கத்தை ஆதரித்ததற்காக ஒரு அமெரிக்க குடிமகனை குறிவைத்து படுகொலை செய்ய இந்திய அரச அதிகாரி ஒருவரால் இயக்கப்பட்டதாக கூறப்படும் சதித்திட்டத்தின் கீழ் நிகில் குப்தா, அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொள்வார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் குப்தா மீது வாடகைக்கு கொலை மற்றும் கொலைக்கு சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளன.

இந்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை இன்று விசாரணை நடைபெற்றபோது காலிஸ்தானிய ஆதரவாளர்கள் நீதிமன்றுக்கு வெளியில் பல்வேறு கோசங்களை எழுப்பினர்.

Share
தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...