22 4
இலங்கைசெய்திகள்

உயர் நீதிமன்றத்திற்கே சவால் விடுக்கும் ரணில்

Share

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) சவால் விடுப்பதாகவும் இவ்வாறான நிலைமை தொடருமாக இருந்தால் பயனற்ற நீதிமன்றங்களை மூடிவிடுங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய (18.06.2024) அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது தெடர்பாக அவர் கூறுகையில்,

“ஜனாதிபதி மிகவும் சூட்சுமமான முறையில் பந்து வீசுகின்றார். பெண்களை வலுப்படுத்தும் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் முதலாவது பந்தை வீசியுள்ளார்.

சூட்சும ஞானம் இருப்பதால் இதனை தந்திரம் குணம் என்று குறிப்பிடலாம். அதனையடுத்து, கோவிட் காலத்தில் முஸ்லிம்களின் இறந்த உடலை புதைப்பது தொடர்பான சர்ச்சை விடயத்தை இரண்டாவது பந்தாக வீசினார்.

பெண்கள் வலுப்படுத்தல் தொடர்பான விடயத்தில் பாலின மாற்றத்திற்கு அனுமதி வழங்கும் வகையில் சட்டங்கள் வருவது சிக்கலுக்குரியது.

உயிரியல் ரீதியிலான பெண்களை பலப்படுத்துவது சரியானது. ஆனால் அந்தப் போர்வையில் பாலின மாற்று வியாபாரத்திற்கு இடமளிப்பதை அனுமதிக்க முடியாது. உயர் நீதிமன்றத் தீர்மானத்திற்கு சவால் விடுவது தவறானதே.

அத்துடன், வரிக்கு மேல் வரி அறவிடுவது தவறுதான். என்றாலும் நீதிமன்றத்திற்கு சவால் விடுவது மிகவும் பாரதூரமானதே. அப்படியென்றால் உயர்நீதிமன்றத்தை மூடிவிடுங்கள். அவ்வாறான உயர்நீதிமன்றத்தை வைத்திருப்பதில் பலனில்லை” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...

low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...