naren
உலகம்செய்திகள்

கமலா ஹாரிஷ் உத்வேகத்தின் ஆதாரம்! – மோடி புகழாரம்

Share

அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஷ் தெரிவு செய்தமை ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வாகும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி  தெரிவித்துள்ளார்.

அத்துடன், உலகெங்கிலும் உள்ள பலருக்கும் ஒரு உத்வேகத்தின் ஆதாரமாக கமலா ஹாரிஷ் உள்ளார் என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி அந் நாட்டு துணை அதிபர் கமலா ஹாரிஷை சந்தித்துள்ளார். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர்,

அமெரிக்காவின் துணை அதிபராக உங்களைத் தேர்வு செய்தது ஒரு முக்கியமான மற்றும் வரலாற்று நிகழ்வாகும். நீங்கள் உலகெங்கிலும் உள்ள பலருக்கு உத்வேகத்தின் ஆதாரமாக இருக்கிறீர்கள்.

ஜோ பைடன் தலைமையின் கீழ் எங்கள் இரு நாட்டு தரப்பு உறவுகள் புதிய உயரங்களைத் தொடும் என்று நான் நம்புகிறேன். இந்திய மக்கள் உங்களை வரவேற்க காத்திருக்கிறார்கள்.

இந்தியா வருகைக்காக உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன் – எனத் தெரிவித்துள்ளார்.

nare

இதன்போது கருத்து வெளியிட்ட அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஷ்,

இரு நாடுகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே துடிப்பான மக்கள் தொடர்பு ஒரு பாலமாக உள்ளது, அவர்களின் பங்களிப்புகள் பாராட்டத்தக்கவை என தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....