naren
உலகம்செய்திகள்

கமலா ஹாரிஷ் உத்வேகத்தின் ஆதாரம்! – மோடி புகழாரம்

Share

அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஷ் தெரிவு செய்தமை ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வாகும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி  தெரிவித்துள்ளார்.

அத்துடன், உலகெங்கிலும் உள்ள பலருக்கும் ஒரு உத்வேகத்தின் ஆதாரமாக கமலா ஹாரிஷ் உள்ளார் என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி அந் நாட்டு துணை அதிபர் கமலா ஹாரிஷை சந்தித்துள்ளார். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர்,

அமெரிக்காவின் துணை அதிபராக உங்களைத் தேர்வு செய்தது ஒரு முக்கியமான மற்றும் வரலாற்று நிகழ்வாகும். நீங்கள் உலகெங்கிலும் உள்ள பலருக்கு உத்வேகத்தின் ஆதாரமாக இருக்கிறீர்கள்.

ஜோ பைடன் தலைமையின் கீழ் எங்கள் இரு நாட்டு தரப்பு உறவுகள் புதிய உயரங்களைத் தொடும் என்று நான் நம்புகிறேன். இந்திய மக்கள் உங்களை வரவேற்க காத்திருக்கிறார்கள்.

இந்தியா வருகைக்காக உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன் – எனத் தெரிவித்துள்ளார்.

nare

இதன்போது கருத்து வெளியிட்ட அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஷ்,

இரு நாடுகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே துடிப்பான மக்கள் தொடர்பு ஒரு பாலமாக உள்ளது, அவர்களின் பங்களிப்புகள் பாராட்டத்தக்கவை என தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...