உலகம்செய்திகள்

கமலா ஹாரிஷ் உத்வேகத்தின் ஆதாரம்! – மோடி புகழாரம்

Share
naren
Share

அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஷ் தெரிவு செய்தமை ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வாகும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி  தெரிவித்துள்ளார்.

அத்துடன், உலகெங்கிலும் உள்ள பலருக்கும் ஒரு உத்வேகத்தின் ஆதாரமாக கமலா ஹாரிஷ் உள்ளார் என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி அந் நாட்டு துணை அதிபர் கமலா ஹாரிஷை சந்தித்துள்ளார். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர்,

அமெரிக்காவின் துணை அதிபராக உங்களைத் தேர்வு செய்தது ஒரு முக்கியமான மற்றும் வரலாற்று நிகழ்வாகும். நீங்கள் உலகெங்கிலும் உள்ள பலருக்கு உத்வேகத்தின் ஆதாரமாக இருக்கிறீர்கள்.

ஜோ பைடன் தலைமையின் கீழ் எங்கள் இரு நாட்டு தரப்பு உறவுகள் புதிய உயரங்களைத் தொடும் என்று நான் நம்புகிறேன். இந்திய மக்கள் உங்களை வரவேற்க காத்திருக்கிறார்கள்.

இந்தியா வருகைக்காக உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன் – எனத் தெரிவித்துள்ளார்.

nare

இதன்போது கருத்து வெளியிட்ட அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஷ்,

இரு நாடுகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே துடிப்பான மக்கள் தொடர்பு ஒரு பாலமாக உள்ளது, அவர்களின் பங்களிப்புகள் பாராட்டத்தக்கவை என தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...