1 scaled
உலகம்செய்திகள்

சீனாவின் கனவு திட்டத்திற்கு எதிராக இத்தாலி முக்கிய முடிவு

Share

சீனாவின் கனவு திட்டத்திற்கு எதிராக இத்தாலி முக்கிய முடிவு

சீனாவின் பெல்ட் அன்ட் ரோடு திட்டத்தில் இருந்து விலக இத்தாலி முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மற்றும் கடல் வழி மார்க்கமாக ஆசியாவை ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் இணைக்கும் பெல்ட் அன்ட் ரோடு (பிஆர்ஐ) )என்ற திட்டத்தை சீனா அறிவித்துள்ளது.

ஜி7 அமைப்பில் இருந்த இத்தாலி மட்டும் கடந்த 2004ம் ஆண்டு சீனாவின் இந்த பெல்ட் அன்ட் ரோடு திட்டத்தில் இணைந்து இருந்தது.

ஆனால் இதனை தொடர்ந்து சீனாவின் இந்த பெல்ட் அன்ட் ரோடு திட்டம் தங்கள் நாட்டின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என இத்தாலியின் வெளியுறவு அமைச்சர் அந்தோனியோ தஜானி இந்த மாத தொடக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தார்.

இதைப் போல இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி சீனாவின் பெல்ட் அன்ட் ரோடு திட்டத்தில் இணைந்தது மிகப்பெரிய தவறு என்று அவ்வப்போது தெரிவித்து வந்தார்.

இந்நிலையில் இந்தியாவில் தற்போது செப்டம்பர் 9 மற்றும் 10 திகதியில் நடைபெற்று முடிந்துள்ள ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி சீன பிரதமர் லி கியாங்-ஐ சந்தித்து பெல்ட் அன்ட் ரோடு திட்டத்திலிருந்து இத்தாலி விலக முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி தன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு சீன பிரதமர் லி கியாங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆனால் சீன பிரதமர் லி கியாங் வேண்டுகோளை இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

பெல்ட் அன்ட் ரோடு திட்டத்தின் அடுத்த கூட்டம் சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த திட்டத்தில் இருந்து இத்தாலி விலக முடிவு செய்து இருப்பது சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...