1 scaled
உலகம்செய்திகள்

சீனாவின் கனவு திட்டத்திற்கு எதிராக இத்தாலி முக்கிய முடிவு

Share

சீனாவின் கனவு திட்டத்திற்கு எதிராக இத்தாலி முக்கிய முடிவு

சீனாவின் பெல்ட் அன்ட் ரோடு திட்டத்தில் இருந்து விலக இத்தாலி முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மற்றும் கடல் வழி மார்க்கமாக ஆசியாவை ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் இணைக்கும் பெல்ட் அன்ட் ரோடு (பிஆர்ஐ) )என்ற திட்டத்தை சீனா அறிவித்துள்ளது.

ஜி7 அமைப்பில் இருந்த இத்தாலி மட்டும் கடந்த 2004ம் ஆண்டு சீனாவின் இந்த பெல்ட் அன்ட் ரோடு திட்டத்தில் இணைந்து இருந்தது.

ஆனால் இதனை தொடர்ந்து சீனாவின் இந்த பெல்ட் அன்ட் ரோடு திட்டம் தங்கள் நாட்டின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என இத்தாலியின் வெளியுறவு அமைச்சர் அந்தோனியோ தஜானி இந்த மாத தொடக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தார்.

இதைப் போல இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி சீனாவின் பெல்ட் அன்ட் ரோடு திட்டத்தில் இணைந்தது மிகப்பெரிய தவறு என்று அவ்வப்போது தெரிவித்து வந்தார்.

இந்நிலையில் இந்தியாவில் தற்போது செப்டம்பர் 9 மற்றும் 10 திகதியில் நடைபெற்று முடிந்துள்ள ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி சீன பிரதமர் லி கியாங்-ஐ சந்தித்து பெல்ட் அன்ட் ரோடு திட்டத்திலிருந்து இத்தாலி விலக முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி தன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு சீன பிரதமர் லி கியாங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆனால் சீன பிரதமர் லி கியாங் வேண்டுகோளை இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

பெல்ட் அன்ட் ரோடு திட்டத்தின் அடுத்த கூட்டம் சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த திட்டத்தில் இருந்து இத்தாலி விலக முடிவு செய்து இருப்பது சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
Untitled 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை – மலேசியா இடையே புதிய வான்வழி இணைப்பு: பாட்டிக் ஏர் தனது சேவையைத் தொடங்கியது!

மலேசியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான விமான இணைப்பை வலுப்படுத்தும் ஒரு புதிய மைல்கல்லாக, பாட்டிக் ஏர் மலேசியா...

Untitled 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொட்டகமுவ மும்முறை கொலை வழக்கு: 18 ஆண்டுகளின் பின் நான்கு சந்தேக நபர்கள் விடுதலை!

கடந்த 2006-ஆம் ஆண்டு பாலப்பிட்டிய, தொட்டகமுவ பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட...

Untitled 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யக்கல கட்சி அலுவலக விவகாரம்: ஜே.வி.பி-யிடம் இருந்து முன்னிலை சோசலிசக் கட்சியிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு!

யக்கல (Yakkala) பகுதியில் அமைந்துள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் (FLSP) அலுவலகத்தை ஜனதா விமுக்தி பெரமுன...

Untitled 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகோடா ராஜினாமா: புதிய பதில் தலைவர் நியமனம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் ஆகிய நிறுவனங்களின் தலைவராகப் பணியாற்றி வந்த...