பல ஆண்டுகளாக தேடி வந்த கொடூர குற்றவாளி
உலகம்செய்திகள்

பல ஆண்டுகளாக தேடி வந்த கொடூர குற்றவாளி

Share

பல ஆண்டுகளாக தேடி வந்த கொடூர குற்றவாளி

இத்தாலியின் மிக ஆபத்தான தலைமறைவு குற்றவாளி ஒருவர் தனது கால்பந்து வெறி காரணமாக 11 ஆண்டுகளுக்கு பிறகு பொலிசாரிடம் சிக்கியுள்ளார்.

இத்தாலியின் மூன்றாவது பெரிய நகரமான நேபிள்ஸ் பகுதியில் இயங்கிவரும் Camorra என்ற ஆபத்தான குழுவினருக்கு நெருக்கமானவர் 60 வயதான Vincenzo La Porta.

கடந்த 11 ஆண்டுகளாக இத்தாலி பொலிசாரால் இவர் தேடப்பட்டு வந்துள்ளார். ஆனால் இந்த ஆண்டு துவக்கத்தில் கிரேக்கத்தில் கால்பந்து வெற்றிக் கொண்டாட்டத்தில் பதிவு செய்யப்பட்ட புகைப்படங்களில் இவரது முகமும் பதிவாகியிருந்தது.

கால்பந்து வெறியரான Vincenzo La Porta, தாம் ஆதரிக்கும் அணியினரின் வெற்றியை கொண்டாடிய நிலையிலேயே, அதிகாரிகள் பார்வையில் சிக்கியுள்ளார்.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நெப்போலி அணி தனது முதல் இத்தாலிய சாம்பியன்ஷிப்பை வென்ற பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நெப்போலி அணி பட்டம் வென்றதும், தாம் தலைமறைவு குற்றவாளி என்பதை மறந்து La Porta கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இத்தாலியில் La Porta மீது ஊழல், வரி ஏய்ப்பு, குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது உள்ளிட்ட குற்றங்களுக்காக, அவர் ஏற்கனவே 14 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள் தண்டிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அவரை பொலிசார் கைது செய்துள்ளனர். கிரேக்கத்தில் இருந்து அவரை இத்தாலிக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

செய்தி ஊடகம் ஒன்றிடம் La Porta தெரிவிக்கையில், கிரேக்கத்தில் தாம் புதிய வாழ்க்கை ஒன்றை துவங்கியுள்ளதாகவும், 9 வயதில் ஒரு மகன் இருப்பதாகவும், சமையல்காரனாக பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, தாம் ஒரு இருதய நோயாளி எனவும், இத்தாலிக்கு அனுப்பி வைக்கப்பட்டால், தமது குடும்பமும் தாமும் நாசமாகிவிடும் சூழல் ஏற்படும் என தெரிவித்துள்ளார்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30
செய்திகள்இந்தியா

உலகத் தலைவர்களில் முதலிடம் பிடித்து மோடி வரலாற்றுச் சாதனை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில்  100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பாளர்களை...

29
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் – 20 ஓவர்களில் 256 ஓட்டங்கள் குவிப்பு!

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான போட்டியில்,...

28
அரசியல்இலங்கைசெய்திகள்

“சுரேஷ் சலேயின் கைது ஒரு கண்துடைப்பு”: அரசாங்கம் மீது சரத் வீரசேகர கடும் தாக்குதல்!

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது என்பது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் கத்தோலிக்க...

27
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை: அணு ஆயுதத் திட்டத்தை முடக்க டிரம்ப் அழுத்தம்!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான மூன்றாவது சுற்று மறைமுகப் பேச்சுவார்த்தைகள்...