பல ஆண்டுகளாக தேடி வந்த கொடூர குற்றவாளி
உலகம்செய்திகள்

பல ஆண்டுகளாக தேடி வந்த கொடூர குற்றவாளி

Share

பல ஆண்டுகளாக தேடி வந்த கொடூர குற்றவாளி

இத்தாலியின் மிக ஆபத்தான தலைமறைவு குற்றவாளி ஒருவர் தனது கால்பந்து வெறி காரணமாக 11 ஆண்டுகளுக்கு பிறகு பொலிசாரிடம் சிக்கியுள்ளார்.

இத்தாலியின் மூன்றாவது பெரிய நகரமான நேபிள்ஸ் பகுதியில் இயங்கிவரும் Camorra என்ற ஆபத்தான குழுவினருக்கு நெருக்கமானவர் 60 வயதான Vincenzo La Porta.

கடந்த 11 ஆண்டுகளாக இத்தாலி பொலிசாரால் இவர் தேடப்பட்டு வந்துள்ளார். ஆனால் இந்த ஆண்டு துவக்கத்தில் கிரேக்கத்தில் கால்பந்து வெற்றிக் கொண்டாட்டத்தில் பதிவு செய்யப்பட்ட புகைப்படங்களில் இவரது முகமும் பதிவாகியிருந்தது.

கால்பந்து வெறியரான Vincenzo La Porta, தாம் ஆதரிக்கும் அணியினரின் வெற்றியை கொண்டாடிய நிலையிலேயே, அதிகாரிகள் பார்வையில் சிக்கியுள்ளார்.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நெப்போலி அணி தனது முதல் இத்தாலிய சாம்பியன்ஷிப்பை வென்ற பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நெப்போலி அணி பட்டம் வென்றதும், தாம் தலைமறைவு குற்றவாளி என்பதை மறந்து La Porta கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இத்தாலியில் La Porta மீது ஊழல், வரி ஏய்ப்பு, குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது உள்ளிட்ட குற்றங்களுக்காக, அவர் ஏற்கனவே 14 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள் தண்டிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அவரை பொலிசார் கைது செய்துள்ளனர். கிரேக்கத்தில் இருந்து அவரை இத்தாலிக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

செய்தி ஊடகம் ஒன்றிடம் La Porta தெரிவிக்கையில், கிரேக்கத்தில் தாம் புதிய வாழ்க்கை ஒன்றை துவங்கியுள்ளதாகவும், 9 வயதில் ஒரு மகன் இருப்பதாகவும், சமையல்காரனாக பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, தாம் ஒரு இருதய நோயாளி எனவும், இத்தாலிக்கு அனுப்பி வைக்கப்பட்டால், தமது குடும்பமும் தாமும் நாசமாகிவிடும் சூழல் ஏற்படும் என தெரிவித்துள்ளார்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...