tamilni 303 scaled
உலகம்செய்திகள்

இந்தியா நோக்கி புறப்பட்ட இஸ்ரேலிய சரக்கு கப்பல் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் சிறைபிடிப்பு

Share

இந்தியா நோக்கி புறப்பட்ட இஸ்ரேலிய சரக்கு கப்பல் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் சிறைபிடிப்பு

ஏமனின் ஈரான் ஆதரவு ஹவுதி போராளிகள் செங்கடலில் இஸ்ரேலிய சரக்கு கப்பலைக் கைப்பற்றியதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.

குறித்த கப்பல் தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளது. காஸா மீதான இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதல் நீடித்து வரும் நிலையில், செங்கடலில் இஸ்ரேலிய கப்பல்களை குறிவைப்போம் என்று ஹவுதி போராளிகள் குழு மிரட்டல் விடுத்திருந்தது.

இந்த நிலையில் ஹவுதி போராளிகள் தரப்பில் இருந்து வெளியான அறிக்கையில், நாங்கள் இஸ்ரேலிய சரக்குக் கப்பலை ஏமன் கடற்பகுதிக்கு கொண்டு சென்றுள்ளோம் என குறிப்பிட்டுள்ளனர்.

மட்டுமின்றி, மேலதிக தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். வெளியான தரவுகளின் அடிப்படையில், ஹவுதி போராளிகள் கைப்பற்றியது சரக்கு கப்பல் என்றும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 25 பணியாளர்கள் இருந்தனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அது இஸ்ரேலிய சரக்கு கப்பல் என ஹவுதி போராளிகள் தெரிவித்துள்ள நிலையில், இஸ்ரேல் தரப்பு முற்றாக மறுத்துள்ளது. அதுமட்டுமின்றி, அந்த கப்பலில் இந்தியர்கள் எவரும் இல்லை என்றும் பிரதமர் நெதன்யாகு அலுவலகத்தில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...

images 4 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக வாக்களிக்கும் உரிமை மற்றும் குடியுரிமை வழங்கு: மத்திய அரசுக்கு எஸ். ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கு (Refugees) வாக்களிக்கும் உரிமை மற்றும்...

25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...

25 690c956ec39eb
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கண் பரிசோதனை நிலையத்தில் தீ விபத்து: மின் ஒழுக்கு காரணமெனத் தகவல்!

திருகோணமலைத் துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, திருகோணமலை பொது வைத்தியசாலையின் அருகாமையில் உள்ள ஒரு தனியார் கண்...