tamilni 303 scaled
உலகம்செய்திகள்

இந்தியா நோக்கி புறப்பட்ட இஸ்ரேலிய சரக்கு கப்பல் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் சிறைபிடிப்பு

Share

இந்தியா நோக்கி புறப்பட்ட இஸ்ரேலிய சரக்கு கப்பல் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் சிறைபிடிப்பு

ஏமனின் ஈரான் ஆதரவு ஹவுதி போராளிகள் செங்கடலில் இஸ்ரேலிய சரக்கு கப்பலைக் கைப்பற்றியதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.

குறித்த கப்பல் தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளது. காஸா மீதான இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதல் நீடித்து வரும் நிலையில், செங்கடலில் இஸ்ரேலிய கப்பல்களை குறிவைப்போம் என்று ஹவுதி போராளிகள் குழு மிரட்டல் விடுத்திருந்தது.

இந்த நிலையில் ஹவுதி போராளிகள் தரப்பில் இருந்து வெளியான அறிக்கையில், நாங்கள் இஸ்ரேலிய சரக்குக் கப்பலை ஏமன் கடற்பகுதிக்கு கொண்டு சென்றுள்ளோம் என குறிப்பிட்டுள்ளனர்.

மட்டுமின்றி, மேலதிக தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். வெளியான தரவுகளின் அடிப்படையில், ஹவுதி போராளிகள் கைப்பற்றியது சரக்கு கப்பல் என்றும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 25 பணியாளர்கள் இருந்தனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அது இஸ்ரேலிய சரக்கு கப்பல் என ஹவுதி போராளிகள் தெரிவித்துள்ள நிலையில், இஸ்ரேல் தரப்பு முற்றாக மறுத்துள்ளது. அதுமட்டுமின்றி, அந்த கப்பலில் இந்தியர்கள் எவரும் இல்லை என்றும் பிரதமர் நெதன்யாகு அலுவலகத்தில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...