உலகம்செய்திகள்

காசா நாடாளுமன்றத்தை தன்வசப்படுத்திய இஸ்ரேல்

Share
tamilni 209 scaled
Share

காசா நாடாளுமன்றத்தை தன்வசப்படுத்திய இஸ்ரேல்

ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்டுவரும் தாக்குதலின் ஒரு நகர்வாக இஸ்ரேல் தரப்பு ஹமாஸின் நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியை கைப்பற்றியுள்ளது.

காசாவில் தரைவழியாக முன்னேறும் இஸ்ரேல் இராணுவம் இந்த நடவடிக்கையை நேற்று(15.11.2023) முன்னெடுத்திருந்தது.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் போராளிகள், இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7ஆம் திகதி ஏவுகணை குண்டு வீச்சு தாக்குதலை ஆரம்பித்தனர்.

அதன்பின் தரைவழியாகவும், வான் வழியாகவும், இஸ்ரேல் பகுதிக்குள் ஊடுருவிய ஹமாஸ் போராளிகள், இஸ்ரேலியர்கள் 1,200 பேரை கண்மூடித்தனமாக சுட்டுக் கொலைசெய்திருந்தனர்.

மேலும், 239 பேரை காசா பகுதிக்குள் கடத்திச் சென்று பணயக்கைதிகளாக பிடித்து சென்றனர். இதன்காரணமாக இஸ்ரேல் இராணுவம் காசாவின் வட பகுதியில் வான்வழித் தாக்குலில் ஈடுபட்டு வருவதோடு தரைவழி தாக்குதல் நகர்வையும் நீடித்துள்ளது.

இந்நிலையில் ஹமாஸின் நாடாளுமன்ற கட்டிடத்தொகுதி கைப்பற்றியமை தொடர்பில் இஸ்ரேல் வெளியிட்டுள்ள செய்தியில்,

காசா எல்லையில் பீரங்கி வாகனங்களுடன் காத்திருந்த இஸ்ரேல் இராணுவம், காசாவின் வட பகுதியில் கடந்த மாதம் 27 ஆம் திகதி ஊடுருவியது.

இஸ்ரேல் விமானப்படை ஹமாஸ் போராளிகளின் இருப்பிடங்களில் குண்டு மழை பொழிய, இஸ்ரேல் தரைப்படை படிப்படியாக முன்னேறி, ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை கைப்பற்றி வந்தது.

காசாவின் மருத்துவமனைகளில் பதுங்கியிருந்த ஹமாஸ் போராளிகளையும் இஸ்ரேல் இராணுவத்தினர் தாக்கினர்.

காசாவில் உள்ள முக்கிய மருத்துவமனையான அல்-குத் மருத்துவமனைக்கு வெளியே ஏவுகணைகளுடன் பாதுகாப்பு பணியில் இருந்த ஹமாஸ் போராளிகள் 24 பேரை இஸ்ரேல் இராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.

ஹமாஸ் அமைப்பின் உளவுப்பிரிவுத் தலைவர் காமிஸ் தபாபாஸ், உயர்நிலை இராணுவ அதிகாரி தஷின் மஸ்லாம் உட்பட ஹமாஸ் படையின் முக்கிய அதிகாரிகள் அனைவரையும் இஸ்ரேல் இராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.

ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருந்த நாடாளுமன்ற கட்டிடத்தையும், இஸ்ரேல் இராணுவத்தினர் கைப்பற்றி உள்ளே புகுந்தனர்.

காசாவின் வடபகுதியில் ஹமாஸ் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து முக்கிய பகுதிகளும் இஸ்ரேல் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது” என கூறப்பட்டுள்ளது.

காசா நகரத்தில் உள்ள அல்-ஷிபா மருத்துவமனையில் மின்சாரம், எரிபொருள், குடிநீர், அத்தியாவசிய மருந்துகள் என அனைத்துக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், நோயாளிகள் பெரும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளதாக மனிதாபிமான அமைப்புக்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, எடை குறைந்த குழந்தைகளை காப்பாற்றுவதற்கு இன்குபேட்டர் வசதி மிகவும் அத்தியாவசியமானதாகும்.

ஆனால், மின்சாரம் இன்றி அவற்றின் செயல்பாடு முடங்கியுள்ளதால் குழந்தைகளை வெளியில் எடுத்து வைக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக காசா வைத்தியர்கள் கவலை வெளியிட்டுள்ளார்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...