rtjy 196 scaled
உலகம்செய்திகள்

24 மணிநேர கெடு விதித்த இஸ்ரேல்

Share

24 மணிநேர கெடு விதித்த இஸ்ரேல்

பாலஸ்தீனத்தின் காசாவுக்குள் தரைவழியாக நுழைந்து தாக்குதல் நடத்த இஸ்ரேல் இராணுவம் தயாராகி வருவதனால் பதற்றமான சூழல் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் காசாவின் வடக்கு பகுதியில் வசிக்கும் 11 இலட்சம் மக்கள் 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் இராணுவம் காலக்கெடு விடுத்துள்ளது.

இதன் போது 1,200க்கும் மேற்பட்ட ஹமாஸ் தீவிரவாதிகள் தரை, வான் மற்றும் கடல் வழியாக இஸ்ரேலின் தென் பகுதியில் நுழைந்து கொடூர தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இத்தாக்குதலில் இதுவரை 1,300 இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளதுடன் 3,300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் ஏராளமான இஸ்ரேலியர்களை, ஹமாஸ் தீவிரவாதிகள் சிறைபிடித்து சென்றுள்ளனர்.

இதற்கு பதிலடியாக ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் போர்தொடுத்தது. இரு தரப்புக்கும் இடையே 7ஆவது நாளாக நேற்று(14.10.2023) கடுமையான சண்டை இடம்பெற்றுள்ளது.

இஸ்ரேலிய பிணைக் கைதிகளை மீட்கவும், ஹமாஸ் தீவிரவாதிகளை அழிக்கவும் காசா பகுதிக்குள் தரைவழியாக நுழைய இஸ்ரேல் இராணுவம் தயாராகி வருகிறது.

இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் இராணுவத்தின் ஒரு லட்சம் வீரர்களும் 100க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் தயார் நிலையில் உள்ளதுடன் 300 பீரங்கிகள் காசா பகுதியை நோக்கி முன்னேறி வருவதாக தெரியவருகின்றது.

இதேவேளை பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் சுமார் 23 இலட்சம் மக்கள் உள்ளதுடன் காசாவின் வடக்கு பகுதியில் மட்டும் சுமார் 11 இலட்சம் பேர் வசிக்கின்றனர்.

இஸ்ரேல் இராணுவம் வடக்கு பகுதியில் தரைவழியாக நுழைய திட்டமிட்டு உள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய அங்கு வசிக்கும் மக்கள் அடுத்த 24 மணி நேரத்துக்குள் தெற்கு பகுதிக்கு செல்லுமாறு இஸ்ரேல் இராணுவம் எச்சரித்துள்ளது.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...