உலகம்செய்திகள்

24 மணிநேர கெடு விதித்த இஸ்ரேல்

Share
rtjy 196 scaled
Share

24 மணிநேர கெடு விதித்த இஸ்ரேல்

பாலஸ்தீனத்தின் காசாவுக்குள் தரைவழியாக நுழைந்து தாக்குதல் நடத்த இஸ்ரேல் இராணுவம் தயாராகி வருவதனால் பதற்றமான சூழல் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் காசாவின் வடக்கு பகுதியில் வசிக்கும் 11 இலட்சம் மக்கள் 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் இராணுவம் காலக்கெடு விடுத்துள்ளது.

இதன் போது 1,200க்கும் மேற்பட்ட ஹமாஸ் தீவிரவாதிகள் தரை, வான் மற்றும் கடல் வழியாக இஸ்ரேலின் தென் பகுதியில் நுழைந்து கொடூர தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இத்தாக்குதலில் இதுவரை 1,300 இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளதுடன் 3,300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் ஏராளமான இஸ்ரேலியர்களை, ஹமாஸ் தீவிரவாதிகள் சிறைபிடித்து சென்றுள்ளனர்.

இதற்கு பதிலடியாக ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் போர்தொடுத்தது. இரு தரப்புக்கும் இடையே 7ஆவது நாளாக நேற்று(14.10.2023) கடுமையான சண்டை இடம்பெற்றுள்ளது.

இஸ்ரேலிய பிணைக் கைதிகளை மீட்கவும், ஹமாஸ் தீவிரவாதிகளை அழிக்கவும் காசா பகுதிக்குள் தரைவழியாக நுழைய இஸ்ரேல் இராணுவம் தயாராகி வருகிறது.

இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் இராணுவத்தின் ஒரு லட்சம் வீரர்களும் 100க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் தயார் நிலையில் உள்ளதுடன் 300 பீரங்கிகள் காசா பகுதியை நோக்கி முன்னேறி வருவதாக தெரியவருகின்றது.

இதேவேளை பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் சுமார் 23 இலட்சம் மக்கள் உள்ளதுடன் காசாவின் வடக்கு பகுதியில் மட்டும் சுமார் 11 இலட்சம் பேர் வசிக்கின்றனர்.

இஸ்ரேல் இராணுவம் வடக்கு பகுதியில் தரைவழியாக நுழைய திட்டமிட்டு உள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய அங்கு வசிக்கும் மக்கள் அடுத்த 24 மணி நேரத்துக்குள் தெற்கு பகுதிக்கு செல்லுமாறு இஸ்ரேல் இராணுவம் எச்சரித்துள்ளது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...