8 3
உலகம்செய்திகள்

அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் : எச்சரிக்கும் ஈரான்

Share

ஈரானிய அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் மூர்க்கத்தனமானவை என்றும் இது பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலடி கொடுக்க தெஹ்ரான் அனைத்து விருப்பங்களையும் கொண்டுள்ளது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய பின்னர், ஈரானில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டதைக் கண்டறிந்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) தெரிவித்துள்ளன.

சிறிது நேரத்திற்கு முன்பு, ஈரானில் இருந்து இஸ்ரேல் நாட்டை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் முழுவதும் பல பகுதிகளில் சைரன்கள் ஒலித்தன என்று ஐ.டி.எஃப் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் சில பகுதிகளில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் தஞ்சம் அடையுமாறு குடியிருப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

ஈரானின் அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்க தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் தனது வான்வெளியை மூடிவிட்டதாக இஸ்ரேல் விமான நிலைய ஆணையம் முன்னதாக ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது,

இருப்பினும் எகிப்து மற்றும் ஜோர்தானுடனான தரைவழிப் போக்குவரத்து வழக்கம் போல் இயங்குகிறது. இஸ்ரேலின் வான்வெளி நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் மூடப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் விமான நிறுவனங்களுடன் புதுப்பித்த நிலையில் இருக்க வேண்டும். சினாய் மற்றும் ஜோர்தானுக்கான தரைவழி கடவைகள் வழக்கம் போல் இயங்குகின்றன என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
கொலம்பியா
உலகம்

கொலம்பியாவில் பதிவான நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கானோர் பலி.

கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளதாக சரவதேச ஊடகங்கள்...

ATSB
உலகம்

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள் – பயணிகளின் நிலை குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் !

இன்று காலை, சிட்னி விமான நிலையத்தில் ஜெட்ஸ்டார் பயணிகள் விமானமும் கட்டார் ஏர்வேஸ் விமானமும் மோதிக்கொள்ளும்...

tax d
உலகம்

செனட் அவையின் ஒப்புதலுடன் நிறைவேறியது 100 வீத வரி விதிப்பு!

“லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026” என அழைக்கப்படும் இந்தச்...

iraan us war
உலகம்

மீண்டும் தீவிரமடையும் தாக்குதல்கள் – பொதுமக்கள் 11 பேர் பலி.

இன்று அதிகாலை ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், ஏமனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாரேப் மாகாணத்தை...