24 5
உலகம்செய்திகள்

இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுக்கு பில்லியன் டொலர் கடன் வழங்கிய சர்வதேச அமைப்பு

Share

மூழ்கி வரும் பொருளாதாரத்தை சீரமைக்க, பாகிஸ்தானுக்கு ஒரு பில்லியன் டொலர் கடன் வழங்க, சர்வதேச நாணய நிதியம் (IMF) ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த ஒப்புதல் நேற்று (09) வோசிங்டனில் இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக்குழுவினால் வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பாகிஸ்தானுக்கு கடன் வழங்கக் கூடாது என்று தமது எதிர்ப்பை இந்தியா முறைப்படி தெரிவித்திருந்தது.

எனினும் இந்தியாவின் எதிர்ப்பை புறக்கணித்து சர்வதேச நாணய நிதியம், பாகிஸ்தானுக்கு கடனை வழங்கியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திடம், மூழ்கி வரும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, 1 பில்லியன் டொலர் கடனை பாகிஸ்தான் கோரியிருந்தது.

இந்தநிலையில் வழங்கப்படும் நிதியை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் பயன்படுத்துவதாக, இந்தியா குற்றம் சுமத்தியிருந்தது.

இருப்பினும், இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி, பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டொலர் கடன் கொடுக்க ஐ.எம்.எப்., சம்மதம் தெரிவித்ததாக, பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

இதற்காக பாகிஸ்தான் பிரதமர் சபாஸ் செரீப் சர்வதேச நாணய நிதியத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 117
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி விகாரை பகுதி காணி விடுவிப்பு: உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் காணி உள்ளவர்கள், தமது காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்களுடன்...

world 116
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குருநாகலில் செங்கல் ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் பலி!

குருநாகல் மாவட்டம், வாரியப்பொல – நாரம்மல வீதியின் நெலும்புவ, கொலமுணுஓயா பகுதியில் இன்று (ஏப்ரல் 12,...

world 115
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் புதையல் வேட்டை: அதிரடிப்படை அதிகாரி உட்பட மேலும் இருவர் கைது!

மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மகா ஓயா விசேட அதிரடிப்படை...

world 114
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் இளவாலையில் அதிரடி: வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு!

யாழ்ப்பாணம், இளவாலை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்று (ஏப்ரல் 12, 2026)...