24 6639985c5e4a5
உலகம்செய்திகள்

மாலைத்தீவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட இந்திய படையினர்

Share

மாலைத்தீவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட இந்திய படையினர்

மாலைத்தீவில் (Maldives) நிலைகொண்டிருந்த 51 இந்திய படைவீரர்களும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக மாலைத்தீவு அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்திய (India) ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதான பேச்சாளர், குறித்த படையினர் நாடு திரும்பியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இருப்பினும், மாலைத்தீவில் நிலைகொண்டிருக்கும் இந்திய வீரர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.

அதேவேளை, மாலைத்தீவில் உள்ள டோர்னியர் விமானம் மற்றும் உலங்கு வானூர்திகளை நிர்வகிப்பதற்கு இந்தியாவிலிருந்து சிவிலியன் நிபுணர்களை பணியமர்த்துவதற்காக இரண்டு நாடுகளும் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், மாலைத்தீவிலிருந்து இந்திய படையினர் திருப்பி அனுப்பப்பட்டதற்கு காரணம் அந்நாட்டு ஜனாதிபதியின் தேர்தல் பிரசாரத்தின் ஒரு மூலக்கல்லாக இருக்கலாம் என கூறப்படுகின்றது.

இதன்படி, மாலைத்தீவு ஜனாதிபதியின் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து உடனடியாக இந்திய இராணுவ படையினரை திரும்பப் பெறுமாறு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...