7 11
உலகம்செய்திகள்

அதிகரித்து வரும் போர் பதற்றம்! தாக்குதலை தொடங்கிய இந்திய கடற்படை

Share

அண்டை நாடான பாகிஸ்தானின் தாக்குதலுக்குப் பிறகு, அரேபிய கடலில் பல இலக்குகளுக்கு எதிராக இந்திய கடற்படை பதிலடி நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன்.

ஜம்மு, பதான்கோட், உதம்பூர் மற்றும் வேறு சில இடங்களில் உள்ள இந்திய இராணுவ இலக்குகளை தாக்க பாகிஸ்தானின் முயற்சித்ததாகவும், அதனை ட்ரோன்கள் மூலம் இந்தியா முறியடித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் குறித்த தாக்குதலுக்கு பதிலடி வழங்கும் முகமாக இந்திய கடற்படை தாக்குதலை ஆரம்பித்துள்ளது.

பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சிகளுக்குப் பிறகு, “தனது இறையாண்மையைக் காக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்தியா முழுமையாகத் தயாராக உள்ளது” என்று இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானுடனான போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கராச்சி துறைமுகத்தை குறிவைத்து இந்தியா குறிப்பிடத்தக்க இராணுவ நடவடிக்கையை இதன்மூலம் மேற்கொண்டுள்ளது.

நேற்று இரவு தெற்கு பாகிஸ்தானின் கராச்சி நகரத்தில் உள்ள துறைமுகப் பகுதிக்கு அருகில் பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், 1971 ஆம் ஆண்டு போருக்குப் பிறகு இந்திய கடற்படை பாகிஸ்தானுக்கு எதிராக நேரடிப் போர்முனையைத் திறந்திருப்பது இதுவே முதல் முறை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தானின் எரிபொருள் இருப்புக்கள் மற்றும் கடற்படை சொத்துக்கள் பெருமளவில் இதன்போது சேதமடைந்ததாக இந்திய தரப்பு தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
images 6 4
இலங்கைசெய்திகள்

சிபெட்கோ மாதாந்த விலை திருத்தம்: டிசம்பர் மாத எரிபொருள் விலைகளில் மாற்றமில்லை!

‘சிபெட்கோ’ (CEYPETCO) எனப்படும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தத்தில் மாற்றமில்லை...

images 5 2
செய்திகள்இலங்கை

கொழும்பு – கண்டி வீதி: யக்கலவில் பாலம் இடிந்து விழுந்தது; போக்குவரத்து தடை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக, கொழும்பு – கண்டி பிரதான...

landslide 1
செய்திகள்இலங்கை

அனர்த்தம் காரணமாக உயிரிழப்புகள் 159 ஆக உயர்வு; 203 பேர் காணாமல் போயுள்ளனர் – அனர்த்த முகாமைத்துவ நிலையம்!

நாட்டில் ஏற்பட்ட பேரழிவுகளில் சிக்கி இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்,...

images 4 3
செய்திகள்இந்தியாஇலங்கை

இலங்கைக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், உடனடி உதவிகளை அறிவித்தார் பிரதமர் மோடி!

தீவிரமான காலநிலை மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் “திட்வா” (DITWA) புயலின் காரணமாகத் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த...