rtjy 39 scaled
இந்தியாஉலகம்செய்திகள்

பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்ட இந்திய விமானம்

Share

பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்ட இந்திய விமானம்

இந்தியாவின் அகமதாபாத் நகரில் இருந்து டுபாய்க்கு சென்ற போயிங் 737 ரக ஸ்பேஸ் ஜெட் விமானம் பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானம் (05.12.2023) இரவு தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பயணி ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவைப்பட்ட நிலையில் இதுகுறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட போதே அந்த விமானம் பாகிஸ்தானின் கராச்சியில் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

பின்னர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நபரை விமானத்தில் இருந்து சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, அகமதாபாத்தில் இருந்து டுபாய்க்கு போயிங் 737 விமானம் சென்றபோது தர்வால் தர்மேஷ் (வயது 27) என்ற பயணிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

அவருக்கு சர்க்கரை அளவு குறைந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு அவர் குணமடைந்தார். விமானத்தில் எரிபொருள் நிரப்பப்பட்டு டுபாய்க்கு புறப்பட்டது என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...