rtjy 38 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேல் பிணை கைதிகளுக்கு போதை மருந்து கொடுத்த ஹமாஸ்

Share

இஸ்ரேல் பிணை கைதிகளுக்கு போதை மருந்து கொடுத்த ஹமாஸ்

ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிக்கும் போது அவர்கள் அமைதியாக இருப்பதற்காக போதை மருந்து கொடுத்ததாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டி உள்ளது.

இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் இருந்து கடந்த அக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் தீவிரவாதிகள் சுமார் 240 பேரைக் கடத்திச் சென்றனர். இவர்களில் 105 பேர் கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் பிணைக் கைதிகளை விடுவிக்கப்படுவதற்கு முன்பு அவர்களுக்கு க்ளோனெக்ஸ் என்ற மயக்க மருந்துகள் கொடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இஸ்ரேலின் சுகாதார அமைச்சக பொது மருத்துவத் தலைவர் ஹகர் மிஸ்ராஹி கூறுகையில், ‘செஞ்சிலுவைச் சங்கத்திடம் இஸ்ரேல் பிணைக்கைதிகளை ஒப்படைப்பதற்கு முன்பு, அவர்களுக்கு க்ளோனெக்ஸ் என்ற போதை மாத்திரைகளை ஹமாஸ் தீவிரவாதிகள் கொடுத்துள்ளனர்.

அதனால் விடுவிக்கப்பட்ட பிணையக் கைதிகள் அமைதியாக இருந்தனர். அவர்கள் அமைதியாக இருப்பதற்காக அவர்களுக்கு போதை மருந்து கொடுக்கப்பட்டுள்ளது’ என கூறியுள்ளார்.

மேலும், விடுவிக்கப்பட்ட பிணைக் கைதிகளின் இரத்தப் பரிசோதனையின் அடிப்படையில் போதை மருந்து கொடுக்கப்பட்டதா? அல்லது அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தெரியவந்ததா? என்பது பற்றியும் எத்தனை பேருக்கு போதை மருந்து கொடுக்கப்பட்டது என்பது குறித்தும் மிஸ்ராஹி குறிப்பிடவில்லையென கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....