உலகம்செய்திகள்

அரிசியை பொதிகளாக எடுத்துச் செல்லும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்

Share

அரிசியை பொதிகளாக எடுத்துச் செல்லும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்

இந்திய அரசு பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ள நிலையில், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்கள் விருப்பமான அரிசியை பொதிகளில் எடுத்துச் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜூலை 20ம் திகதி முதல் இந்தியாவில் இருந்து பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது, கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அரிசி உணவை அதிகமாக பயன்படுத்தும் மக்களை கடுமையாக பாதித்துள்ளது.
இந்த நிலையில், பல ஐக்கிய அரபு அமீரகவாசிகள் கோடை விடுமுறை முடிந்து திரும்பும் போது இந்தியாவில் இருந்து தங்கள் விருப்பமான அரிசியை பொதிகளாக கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக, குறிப்பிட்ட சில வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், தங்களின் விருப்பமான அரிசியை விடுமுறைக்கு சென்று திரும்பும்போது எடுத்துவருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
அதில் ஒருவர் ஷப்னா. இவர் சொந்த ஊருக்கு சென்றும் திரும்பும் போது 5 கிலோ அரிசி எடுத்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். தற்போது அரிசிக்கு உள்ளூர் சந்தையில் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அவர் விடுமுறை முடித்து திரும்பும் போது அரிசி எடுத்து வந்துள்ளார்.
தடை என்பது தற்காலிக சிக்கல்
ஊருக்கு சென்று திரும்பும் போது அரிசி எடுத்து வருவதால், பெரிதாக ஆதாயம் ஏதும் இருப்பதில்லை என்றாலும், பெட்டியில் இடம் இருப்பதால், அரிசி எடுத்து வருவதாக ஷப்னா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து உலகெங்கிலும் மொத்தம் 140 நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. மட்டுமின்றி, அரிசி ஏற்றுமதியில் சுமார் 40 சதவீதம் அளவுக்கு இந்தியாவில் இருந்தே முன்னெடுக்கப்படுகிறது.
இதனால், ஏற்றுமதி தடை என்பது தற்காலிக சிக்கல் எனவும் விரைவில் தீர்க்கப்படும் எனவும் ஐக்கிய அரபு அமீரக மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, வியட்நாம், தாய்லாந்து மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் இருந்து போதுமான அளவுக்கு வெள்ளை அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...