உலகம்செய்திகள்

அரிசியை பொதிகளாக எடுத்துச் செல்லும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்

Share

அரிசியை பொதிகளாக எடுத்துச் செல்லும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்

இந்திய அரசு பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ள நிலையில், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்கள் விருப்பமான அரிசியை பொதிகளில் எடுத்துச் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜூலை 20ம் திகதி முதல் இந்தியாவில் இருந்து பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது, கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அரிசி உணவை அதிகமாக பயன்படுத்தும் மக்களை கடுமையாக பாதித்துள்ளது.
இந்த நிலையில், பல ஐக்கிய அரபு அமீரகவாசிகள் கோடை விடுமுறை முடிந்து திரும்பும் போது இந்தியாவில் இருந்து தங்கள் விருப்பமான அரிசியை பொதிகளாக கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக, குறிப்பிட்ட சில வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், தங்களின் விருப்பமான அரிசியை விடுமுறைக்கு சென்று திரும்பும்போது எடுத்துவருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
அதில் ஒருவர் ஷப்னா. இவர் சொந்த ஊருக்கு சென்றும் திரும்பும் போது 5 கிலோ அரிசி எடுத்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். தற்போது அரிசிக்கு உள்ளூர் சந்தையில் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அவர் விடுமுறை முடித்து திரும்பும் போது அரிசி எடுத்து வந்துள்ளார்.
தடை என்பது தற்காலிக சிக்கல்
ஊருக்கு சென்று திரும்பும் போது அரிசி எடுத்து வருவதால், பெரிதாக ஆதாயம் ஏதும் இருப்பதில்லை என்றாலும், பெட்டியில் இடம் இருப்பதால், அரிசி எடுத்து வருவதாக ஷப்னா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து உலகெங்கிலும் மொத்தம் 140 நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. மட்டுமின்றி, அரிசி ஏற்றுமதியில் சுமார் 40 சதவீதம் அளவுக்கு இந்தியாவில் இருந்தே முன்னெடுக்கப்படுகிறது.
இதனால், ஏற்றுமதி தடை என்பது தற்காலிக சிக்கல் எனவும் விரைவில் தீர்க்கப்படும் எனவும் ஐக்கிய அரபு அமீரக மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, வியட்நாம், தாய்லாந்து மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் இருந்து போதுமான அளவுக்கு வெள்ளை அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏர்பஸ் ஊழல் விவகாரம்: லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் மஹிந்த ராஜபக்ஷ ஆஜர்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஏர்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்ததில் 2 மில்லியன் அமெரிக்க டாலர் லஞ்சம்...

world 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கண் தானத்திற்குப் பெருகும் ஆதரவு: 84 சதவீத மக்கள் விருப்பம்

இலங்கையில் உள்ள மக்களில் சுமார் 84 சதவீதம் பேர் தமது கண்களைத் தானம் செய்ய விருப்பம்...

world 64
செய்திகள்அரசியல்இலங்கை

விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம்: நாமல் ராஜபக்ஷ திட்டவட்டம்

விசாரணை அமைப்புகள் அழைக்கும் போதெல்லாம் தானும் தனது கட்சியும் நேரில் ஆஜராகத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா...

world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பிரஜசக்தி தேசிய திட்டம்: 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி

இலங்கையில் கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்கான ‘பிரஜசக்தி’ தேசிய திட்டத்தின் கீழ், 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான...