4 14 scaled
உலகம்செய்திகள்

அரிசி, கோதுமைக்கு அடுத்து… இன்னொரு ஏற்றுமதி தடை விதித்த இந்தியா

Share

அரிசி, கோதுமைக்கு அடுத்து… இன்னொரு ஏற்றுமதி தடை விதித்த இந்தியா

எதிர்வரும் அக்டோபரில் இருந்து சர்க்கரை ஏற்றுமதியை இந்தியா தடை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆலைகள் சர்க்கரை ஏற்றுமதி செய்வதை இந்திய அரசு தடை செய்வது கடந்த 7 ஆண்டுகளில் முதல் முறை என்றே கூறப்படுகிறது.

போதிய மழை இல்லாததால் கரும்பு விளைச்சல் குறைந்துள்ளதாக வெளியான தகவலை அடுத்தே இந்திய அரசாங்கம் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக மூன்று அரசு வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது.

ஏற்கனவே நியூயார்க் மற்றும் லண்டன் சந்தையில் சர்க்கரை பல மடங்கு விலைக்கு விற்கப்படும் நிலையில், இந்தியாவின் இந்த முடிவு உலகளாவிய உணவுச் சந்தைகளில் மேலும் பணவீக்கம் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தும் என்றே நம்பப்படுகிறது.

பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசிக்கு ஏற்றுமதி தடை விதித்தபோது பட்டியிலடப்பட்ட அதே காரணங்களையே சர்க்கரை தொடர்பிலும் கூறப்படுகிறது. அதாவது, உள்ளூர் சர்க்கரை தேவைகளை பூர்த்தி செய்வதும், உபரி கரும்பிலிருந்து எத்தனால் உற்பத்தியை அதிகரிப்பதும் முதன்மையான கவனமாக உள்ளது என பதிலளிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதே சூழலில் வரவிருக்கும் பருவத்தில், ஏற்றுமதி ஒதுக்கீட்டிற்கு ஒதுக்க போதுமான சர்க்கரை இருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளனர். செப்டம்பர் 30 வரை நடப்பு சீசனில் 6.1 மில்லியன் டன் சர்க்கரையை மட்டுமே ஏற்றுமதி செய்ய ஆலைகளுக்கு இந்தியா அனுமதி அளித்துள்ளது.

கடந்த சீசனில் 11.1 மில்லியன் டன் அளவுக்கு ஆலைகள் ஏற்றுமதி செய்துள்ளனர். இதனிடையே, அதிக கரும்பு விளைச்சலை அளிக்கும் மகாராஷ்டிராவின் மேற்கு பகுதி, மற்றும் கர்நாடகாவின் தென் பகுதிகளில் இந்த ஆண்டு இதுவரை பருவ மழை சராசரியாக 50 சதவீதம் குறைவாக உள்ளது.

இதனால் உள்ளூர் சர்க்கரை விலை இந்த வாரம் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. மட்டுமின்றி, இந்தியாவில் சில்லறை பணவீக்கம் ஜூலை மாதத்தில் 15 மாதங்களில் இல்லாத அளவுக்கு 7.44 சதவீதமாகவும், உணவுப் பணவீக்கம் மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 11.5 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.

மேலும், 2023/24 பருவத்தில் இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 3.3 சதவீதம் குறைந்து 31.7 மில்லியன் டன்னாக இருக்கும் என்றே நம்பப்படுகிறது. இதனிடையே, கடந்த 2016ல், வெளிநாட்டு விற்பனையைக் கட்டுப்படுத்த இந்தியா சர்க்கரை ஏற்றுமதிக்கு 20 சதவீத வரி விதித்தது குறிப்பிடத்தக்கது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 10
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரானின் புதிய வரைபடம்: கடல் எல்லைக் கட்டுப்பாட்டை விரிவுபடுத்துகிறதா ஐ.ஆர்.ஜி.சி?

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC), தனது கடற்படையின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ள ஹோர்முஸ்...

world 9
செய்திகள்உலகம்

வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் எதிர்வரும் 7ஆம் திகதி இலங்கைக்கு அரசமுறைப் பயணம்!

வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான டோ லாம் (To...

world 8
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தியில் பதற்றம்: அமெரிக்கப் போர்க்கப்பல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகத் தகவல்!

ஹோர்முஸ் ஜலசந்திக்குள் (Strait of Hormuz) நுழைய முயன்ற எதிரிப் போர்க்கப்பல்களை “விரைவான மற்றும் தீர்க்கமான...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாட்ஸ்அப் காணொளி அழைப்பு மோசடி: இலங்கையர்களுக்கு கணினி அவசரகால ஆயத்தக் குழு எச்சரிக்கை!

இலங்கையர்களை இலக்கு வைத்து வாட்ஸ்அப் (WhatsApp) தளத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் புதிய வகை காணொளி அழைப்பு...